• Sep 20 2024

குறுக்கே வந்த குணசேகரன்... பதறிப்போன நந்தினி... வெளியான புதிய ப்ரோமோவால் கவலையில் ரசிகர்கள்..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

அதிரடித் திருப்பங்களுடன் நகர்ந்து கொண்டிருக்கும் எதிர்நீச்சல் சீரியலில் இன்றைய தினம் என்ன நிகழவுள்ளது என்பது குறித்த ப்ரோமோ வீடியோ தற்போது வெளியாகி இருக்கின்றது. 


அதில் முதியோர் இல்லத்திற்கு சமைக்கும் ஆர்டரை எடுத்துள்ள நந்தினியுடன் இணைந்து வீட்டுப் பெண்கள் சமைத்த உணவை எடுத்துக் கொண்டு வீட்டிற்கு வெளியில் செல்கின்றனர். அப்போது எதிர்பாராத விதமாக வீட்டுக்கு வந்த குணசேகரன் "எங்கயோ சோறு ஆக்கி எடுத்திட்டுப் போற மாதிரி கிடக்கு" என்கிறார்.


பதிலுக்கு நந்தினி "சும்மா பேசாமல் இருங்க சாமிக் குத்தம் ஆயிடும்" என்கிறார். பின்னர் கதிர் "வா நாலு பேரும் சேர்ந்து போகலாம் என்கிறார். அதற்கு நந்தினி "நாலு, நாப்பது எல்லாம் மாமாக்கு சுத்தமாக ஆகாது" என்கிறார்.


பின்னர் மரியாதையாக உண்மையை சொல்லிடு எனக் குணசேகரன் நந்தினியை மிரட்டுகின்றார். இருப்பினும் பின்னர் போகுமாறு கூறி அவர்களை அனுப்பி வைக்கின்றார்.


பின்னர் வீட்டிற்குள் வந்த குணசேகரன் "சோத்தைக் கட்டி வீட்டுப் பொம்பளைகளை வெளியே அனுப்பி இருக்கு, என்னான்னு விசாலாட்சியிடம் கேட்டு சொல்லுங்க" என வீட்டில் உள்ள ஆண்களிடம் கூறுகின்றார்.

இவ்வாறாக இந்தப் ப்ரோமோ வெளிவந்துள்ளது. இந்தப் ப்ரோமோவைப் பார்த்த ரசிகர்கள் சற்றுக் கவலையடைந்துள்ளனர். ஏனெனில் அந்த வீடியோவில் ஆதிகுணசேகரனாக நடித்த மாரிமுத்துவின் குரலிற்குப் பதிலாக வேறொருவரின் குரல் தான் வைக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement