சன் டிவியில் ஒளிபரப்பாகும் 'எதிர்நீச்சல்' சீரியலிற்கு என்று ஏராளமான ரசிகர்கள் உண்டு. இதில் சமீபகாலமாக ரசிகர்கள் பலரது மனதில் ஓடிக் கொண்டிருக்கும் வினா என்னவெனில் ஆதிரை கல்யாணம் இறுதியில் யாருடன் நடக்கும் என்பது தான். இதுகுறித்த எதிர்பார்ப்புக்கள் ரசிகர்கள் மனதில் அதிகரித்த வண்ணமே இருக்கின்றன.
இந்நிலையில் ஸ்பெஷல் ப்ரோமோ வீடியோ ஒன்று வெளியாகி இருக்கின்றது. அதில் ஜனனி "மிஸ்டர் குணசேகரன் அவர் ஏற்பாடு பண்ணின கல்யாணம் எந்த சூழ்நிலையிலும் நின்றிடக் கூடாது என்று ஒரு கண்டத்தையும், இன்னொரு தண்டத்தையும் எங்க கூட அனுப்பியிருக்கார்" என மனதிற்குள் எண்ணுகின்றார்.
மறுபுறம் ஜனனி, ரேணுகா, நந்தினி, ஆதிரை, கரிகாலன் ஆகியோர் காரில் பயணித்துக் கொண்டிருக்கின்றனர். அப்போது நந்தினி "இவனை எப்படிக் கழட்டி விடுறது" என யோசிக்கின்றார். பின்பு "குடிக்கிற தண்ணீரில் ஏதாவது டானிக் கலந்து குடுத்திடுவமா, அப்போ அவன் சாஞ்சிடுவான்ல" என ரேணுகாவிடம் கேட்கின்றார்.
பதிலுக்கு ரேணுகா "அதுக்கு நீ குடிக்கிறதை அவன் குடிக்கணுமே" எனக் கூறுகின்றார். பின்னர் நந்தினி உங்க கிட்ட ஏதாவது ஐடியா இருக்கா எனக் கேட்கின்றார். அதற்கு ஜனனி நான் வச்சிருக்கேன்" என்கிறார். ஜனனி என்ன செய்யப் போகிறார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
Listen News!