சன்டிவியில் பரபரப்புக்கு பஞ்சம் இல்லாமல் ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான். இந்த சீரியலுக்கென்று தனி ரசிகர் பட்டாளமே காணப்படுகின்றது. அந்த வகையில் இன்றைய நாளுக்கான ப்ரோமோ வெளியாகியுள்ளது.
அதில் கதிர் ஜுவானந்தத்தை தேடி அடியாட்களுடன் அலைந்து திரிகின்றார். அதே போல ஜனனியும் ஜீவானந்தத்தைக் காண நடுக்காட்டில் இருக்கின்றார்.
மறுபுறம் குணசேகரனைப் பார்த்து கரிகாலன் எல்லோரும் மாமா ஜெயிச்சிட்டு இருக்காரு என்று நினைக்கிறீங்க, ஆனால் மாமா தோத்திட்டு இருக்காரு என்று சொல்ல கோபமான குணசேகரன் என்னை என்ன கேவலப்படுத்திறியா என்று கேட்கிறாரு.
மேலும் கதிர் ஒரு வேலையா போயிருக்கிறான் வரும் போது பிணமாக் கூட வரலாம் என்று சொல்ல, கடுப்பான நந்தினி எடு கட்டையை என குணசேகரனை அடிப்பது போல போய் அவன் இங்க வரணும் என்று குணசேகரனிடம் சொல்கின்றார். அப்போது குணசேகரன் கதிர் எதுக்காக போயிருக்கிறான் என்ற உண்மையை சொல்கின்றார். இத்துடன் இந்தப் ப்ரோமோ முடிவடைகின்றது.
Listen News!