• Sep 21 2024

நடிகர் சங்கம் சார்பாக பிரதாப்பின் மரணத்திற்கு இரங்கல் அறிக்கையை வெளியிட்ட நாசர்

stella / 2 years ago

Advertisement

Listen News!

நடிகர், இயக்குநர், எழுத்தாளர் என பன்முகத்தன்மை கொண்ட பிரதாப் போத்தன் உடல் நலக்குறைவு காரணமாக உயிரிழந்த செய்தி ஒட்டுமொத்த தென்னிந்திய திரையுலகையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.

இவரின் இறப்பிற்கு பிரபலங்கள் பலரும் நேரயொகச் சென்றும் சமூக வதை்தளங்கள் மூலமும் தமது இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர்.

வரும் ஆகஸ்ட் மாதம் 13ம் தேதி அடுத்த பிறந்தநாளை கொண்டாட உள்ள நிலையில், திடீரென தூக்கத்திலேயே இவர் உயிரிழந்துள்ளார்.

ஆங்கில இலக்கியங்கள் மீது அளவற்ற காதல் கொண்ட பிரதாப் போத்தன் எழுத்தாளராகவும், இயக்குநராகவும் தமிழ் சினிமா மற்றும் மலையாள திரையுலகில் தனது ஆளுமையை செலுத்தி உள்ளார்.இந்த நிலையில் தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பாக நடிகர் நாசர் எழுதிய இரங்கல் அறிக்கை தற்போது வெளியாகி உள்ளது. 'தகரா 'என்கிற மலையாள காவிய படத்தில் நடிகராக திரையுலகத்தில் அறிமுகமாகி, நல்ல ஒரு இயக்குநராக பரிமளித்து, எளியவராய் எப்போதும் பெருத்த சிரிப்போடும் இயங்கிக் கொண்டிருந்த நண்பர் பிரதாப் போத்தன் அவர்கள், திடீரென்று இப்பூவுலகை விட்டுச் சென்றது பெரும் அதிர்ச்சியைக் கொடுக்கிறது.

அவருடைய திரையுலக நண்பர்கள் வட்டம் தன் குடும்பத்தில் ஒருவரை இழந்தது போல் உணர்வார்கள். ஆறுதல் தேவைப்படுகிற நாமே அவரை இழந்து தவிக்கின்ற குடும்பத்திற்கும், உறவினர்களுக்கும் ஆறுதல் சொல்ல வேண்டிய நிலை. நடிகர் சமூகத்தின் சார்பாக தென்னிந்திய நடிகர் சங்கம் தன் மரியாதையையும், ஆறுதலையும் கலங்கிய கண்ணோடு தெரிவிக்கிறது. என அந்த அறிக்கையில் நாசர் உருக்கமாக குறிப்பிட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்

ஐ லவ் யூ டா அமீர்- ஒருவழியாக காதலுக்கு சம்மதம் தெரிவித்த பிக்பாஸ் பாவானி 

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement