• Sep 20 2024

தமிழின் வீட்டுக்குச் சென்றதால் கோதையிடம் மாட்டிக் கொண்ட நடேசன்- சரஸ்வதியைத் திட்டிய தமிழ்

stella / 1 year ago

Advertisement

Listen News!


விஜய் டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் தமிழும் சரஸ்வதியும்.அந்த வகையில் இந்த சீரியலில் இன்றைய தினம் என்ன நடக்கவுள்ளது என்று பார்ப்போம்.

தமிழ் அசோஷியேசன் தலைவர் ஆனதால் அவரின் அப்பா வீட்டுக்கு வந்திருப்பதோடு தமிழும் அவரை மன்னித்து ஏற்றுக் கொண்டு விட்டார். அத்தோடு தன்னுடைய அப்பா வீட்டுக்கு வந்த போதெல்லாம் அவரை திட்டி அனுப்பியதுக்காக மன்னிப்பும் கேட்கின்றார். அதற்கு நடேசனும் தமிழை சமாதானம் செய்கின்றார்.


இவர்கள் இருவரும் சேர்ந்ததைப் பார்த்து சரஸ்வதி சந்தோஷப்படுவதோடு இருவரையும் சுற்றிப் போடுகின்றார். தொடர்ந்து எல்லோரும் வேலைக்கு போக எனக் கிளம்பி கீழே வர அர்ஜுனின் மாமா நடேசன் தமிழ் கூட பேசிட்டு இருப்பதைப் பார்த்து விடுகின்றார். பின்னர் வீட்டில் கோதை வசுவிடம் அவரது அம்மா வந்தும் ஒழுங்காகக் பேசாமல் விட்டமைக்காக வசுவிடம் மன்னிப்புக் கேட்கின்றார்.

வசுவும் அது பரவாயில்லை அத்தை என சமாதானப்படுத்த கார்த்திக் வந்து கம்பனி விஷயம் பற்றி பேச கோதை எல்லா விஷயமும் என் கிட்டை கேட்ட செய்யிறீங்க நீங்களே ஏதாவது செய்யுங்க என்று சொல்ல அந்த நேரம் தமிழின் வீட்டிற்குச் சென்ற நடேசன் வருகின்றார்.அப்போது அர்ஜுனின் மாமா நடேசன் தமிழின் வீட்டுக்கு போனதைப் பற்றி போட்டுக் கொடுக்கின்றார்.


இதனால் கோபமடைந்த கோதை இதுக்காகத் தான் எனக்கு மாத்திரை தந்து துாங்க சொன்னீங்களா.நான் தோற்றுப் போனது கவலை இல்லையா உங்களுக்கு, எல்லோரும் இருந்துமே நான் தனியாக இருக்கிற மாதிரி தான் எனக்கு இருக்கு என்று தன்னுடைய ஆதங்கத்தை வெளிப்படுத்தி விட்டு செல்ல அர்ஜுன் குடும்பம் சந்தோஷப்படுகின்றது.

பின்னர் தமிழுக்கு ஹாஸ்லியான ட்ரெஸ் எடுத்துக் கொண்டு வந்து சரஸ்வதியும் நமச்சியும் கொடுத்ததால் தமிழ் திட்டுகின்றார்.தொடர்ந்து தமிழும் சரஸ்வதிக்கும் நமச்சிக்கும் தான் வாங்கி வந்த ட்ரெஸ்ஸை கொடுக்க இருவரும் சந்தோஷப்படுகின்றனர்.

பின்னர் கோதை வீட்டுக்குஅஷோசியேசன் மெம்பர்ஸ் செல்கின்றனர். அவர்கள் வருவதைப் பார்த்த அர்ஜுனும் கார்த்திக்கும் எதுவும் சொல்லாமல் நிற்க நடேசன் அவர்களை உள்ளே அழைத்துச் செல்கின்றார். அப்போது அவர்கள் கோ வந்து தான் தமிழை பதவியில் அமர்த்த வேண்டும் என்று சொல்ல கோதை முடியாது என்று சொல்கின்றார். அப்போது நடேசன் நான் அழைத்து வருகின்றேன் நீங்க பயப்பிடாமல் போங்க என்று சொல்கின்றார். இத்துடன் இன்றைய எப்பிஷோட் முடிவடைகின்றது.


Advertisement

Advertisement