• Sep 20 2024

நயனுக்கும் திரிஷாவிற்கும் சண்டையா...அந்த படத்தில் நடிக்காதாற்கு அது தான் காரணமா..உண்மையை உடைத்த திரிஷா..!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் 20வருடங்களை கடந்து முக்கிய நடிகையாக கொடிகட்டி பறந்து வரும் நடிக திரிஷா.இவர் நடிப்பில் M.சரவணன் இயக்கத்தில் ராங்கி வருகின்ற 30 ஆம் தேதி திரையரங்குகளில் பிரமாண்டமாக வெளியாக உள்ளது.இதற்கான ப்ரமோசன் நிகழ்ச்சிகளில் திரிஷா பங்கேற்று வரகின்றார்.அதற்காக பல நேர்காணலையும் பங்கெடுத்து வருகிறார்.அதில் ஒரு நேர்காணலில் பல விடயங்களை பகிர்ந்துள்ளார்.

அதாவது நயன்தாராவிற்கு கொடுக்கப்பட்ட பட்டம் உங்களுக்கு தான் சொந்தமானது என ரசிகர்கள் பலரும் கூறி வருகிறார்கள்.அப்படித்தான் சோசியல் மீடியாவில் போட்டு வருகிறார்கள் .அதைப்பற்றி நீங்க என்ன நினைக்கிறீர்கள் என தொகுப்பாளர் கேட்க...எனக்கு பட்டம் பற்றி அவ்வளவு ஆர்வம் இல்லை.என்னை திரிஷாவாகவே கூப்பிடுங்கள் என்று தான் கூறுகிறேன்.அதனால் என்ன பயன் ..அது யாருக்கு வேண்டுமானாலும் இருக்கலாம் எனக் கூறியுள்ளார்.

அத்தோடு அடுத்தடுத்து படங்களை கைவசம் வைத்திருக்கும் திரிஷா அடுத்து விஜய் மற்றும் அஜித்துடன் நடிக்கப்போகின்றார்.இவ்வாறுஇருக்கையில் தளபதி 67 இல் நீங்க நடிக்கிறீங்க எண்டு ஒரு தகவல் வெளியாகி உள்ளது.அதைப் பற்றி சொல்லுங்க என்று கூறியதும் சிரித்துக்கொண்டே இதைப்பற்றி அடுத்த வருடம் பேசுவோம் என கூறினார்.

இவ்வாறுஇருக்கையில் காத்துவாக்குல ரெண்டு காதல் நடிக்க இருந்தீங்க..என்று ஒரு கதை வந்தது. அது ஏன் நடிக்கவில்லை எனக் கேட்டதும் நான் சில படங்களுக்கு நோ சொன்னால் அது ஒரு காரணத்தோட தான் இருக்கும் அதுக்கு பிறகு நான் அதைப் பற்றி யோசிப்பதும் இல்லை..எல்லாத்திற்கும் ஒரு காரணம் இருக்கும் நான் எதையும் வேணுமென்று செய்வது இல்லை. என கூறி இருந்தார்.


உங்களுக்கும் நயன்தாாாவிற்கும் ஏதும் போட்டி இருக்கா.திரிஷாவா இல்லை நயன்தாராவா என்டு போட்டி போடுகிறார்கள் ரசிகர்கள் . அதைப் பற்றி என்ன கூறிகிறீர்கள் என்று கேட்டபோது...அது கெல்த்தி போட்டியாக இருந்தா ஓகே..அவரவர் ரசிகர்கள் அவர்களுக்கு சப்போர்ட் பண்ணுறது வழமை தான் .ஆனால் ஒருவரை கீழே தள்ளி மற்றொருவரை மேலே வைக்க வேண்டாமே..இருவரையும் நன்றாக சப்போர்ட் பண்ணி மேலே வையுங்கள்.

அத்தோடு உங்களுக்கும் திரிஷாவிற்கும் சண்டையா என கேட்டபோது...நானும் அவங்களும் ஒரே டைமில் இன்டஸ்றிக்கு வந்ததாலே அப்படி கூறுகிறார்கள்.இருவர் நல்ல நண்பர்களாக இருந்தால் மட்டுமே பிரிந்தவுடன் சண்டை பிடிப்பார்கள்.ஆனால் நாங்கள் அப்பிடி இல்லை..ஏதாவது ஒரு இவன்ற்ல மீற் பண்ணினாலும் இரண்டு வார்த்தைகள் மட்டுமே கதை்த்து கொள்வோம் எங்களுக்கு அப்பிடி ஒரு போட்டியும் இல்லை.நமக்கு நம்ம வேலையைப் பார்க்கவே டைம் இல்லை.இதில இது வேறையா என சிரித்துக் கொண்டே கூறினார்.


Advertisement

Advertisement