• Sep 21 2024

நயன் -விக்கி திருமணம் யானை மீது அம்பாரி ஊர்வலம் போல இருந்திச்சு- நக்கல் பேச்சு பேசிய பயில்வான் ரங்கநாதன்

stella / 2 years ago

Advertisement

Listen News!

நட்சத்திர ஜோடிகளாக விளங்கும் நயன்தாராவுக்கும் விக்னேஷ் சிவனுக்கும் நேற்றைய தினம் பிரமாண்டமாக திருமணம் நடந்தது. இத்திருமணத்தில் பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டனர். சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் தாலி எடுத்துக் கொடுக்க நயன்தாரா கழுத்தில் விக்னேஷ் சிவன் தாலி கட்டினார்.

இந்த அழகான தருணங்கள் வீடியோவாக எடுக்கப்பட்டு, நெட்பிளிக்சில் விரைவில் ஒளிபரப்பாக உள்ளது. இவர்களது திருமணத்தை நேரில் சென்று பார்க்க முடியாத ரசிகர்கள், இந்த வீடியோவிற்காக காத்திருக்கின்றனர்.

திருமணம் முடிந்ததை அடுத்து இருவரும் இன்றைய தினம் திருப்பதிக்கு சென்றிருந்தனர். நாளைய தினம் பத்திரிகை மற்றும் மீடியாவை சந்திக்கும் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன், ரிஷப்ஷன் நடத்தவுள்ளனர். அத்தோடு இன்றைய தினம் மஞ்சள் நிறத்தில் அழகான சேலையுடன் வலம்வந்த நயன்தாராவிற்கு ஏராளமான லைக்ஸ்கள் குவிந்துள்ளன.

விக்னேஷ் சிவனும் அவருடைய கையை இறுக்கமாக பிடித்தபடி அவர் நடந்து வந்தது அனைவரையும் கவர்ந்தது.இந்நிலையில் பிரபலங்கள், பிரபல நிகழ்வுகளை தொடர்ந்து கமெண்ட் செய்துவரும் நடிகர் பயில்வான் ரங்கநாதன், நயன்தாரா -விக்னேஷ் சிவன் திருமணம் யானை மீது அம்பாரி ஊர்வலம் போல நடந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

இவர்களது திருமண வீடியோ ஓடிடியில் வெளியாக 25 கோடி ரூபாய்க்கு மேல் விற்பனை ஆகியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement