• Sep 20 2024

சர்ச்சையில் சிக்கிய நயன்-விக்கி...நோட்டீஸ் அனுப்பிய நெட்பிளிக்ஸ்...நடந்தது என்ன..?

Prema / 2 years ago

Advertisement

Listen News!

தென்னிந்தியத் திரையுலகில் ரசிகர்களின் மனம் கவர்ந்த ஜோடிகளாக வலம் வருபவர்கள் நயன்தாரா-விக்னேஷ் சிவன் தம்பதியினர். நயன்தாராவைப் போன்று மனைவி அமைய வேண்டும் என்றும், விக்னேஷ் சிவனைப் போன்று மனைவி அமைய வேண்டும் என்றும் ஆசைப்படும் இளைஞர், யுவதிகள் ஏராளம். அந்தளவிற்கு சினிமாத் திரையுலகில் இவர்கள் இவருக்கும் ஏராளமான ரசிகர் பட்டாளமே உண்டு.

2005-ஆம் ஆண்டில் 'நானும் ரவுடி' தான் என்ற படத்தில் இணைந்து பணியாற்றியதிலிருந்து இவர்கள் இருவரும் சுமார் 6 ஆண்டுகளாக காதலித்து வந்திருந்தனர். இவர்களின் பல நாள் காதல் பந்தம் கடந்த மாதம் திருமணத்தில் முடிந்தது. மகாபலிபுரத்தில் உள்ள நட்சத்திரக் ஹோட்டல் ஒன்றில் இடம்பெற்ற இவர்களது திருமண நிகழ்வில் ஏராளமான திரைப்பிரபலங்கள் கலந்து கொண்டிருந்தனர்.

அதிலும் குறிப்பாக முன்னணி நட்சத்திரங்களான ஷாருக்கான், ரஜினிகாந்த், ஜோதிகா, சூர்யா ஆகியோரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. இந்தப் புகைப்படங்களை விக்னேஷ் சிவன் வெளியிட்டிருந்தார். இதனால் இவர் மீது பரபரப்பு குற்றச்சாட்டு ஒன்றை முன் வைத்துள்ளனர் நெட்பிளிக்ஸ் நிறுவனத்தினர்.

அதாவது இவர்கள் இருவரும் தங்களது திருமண வீடியோ குறித்த ஒளிபரப்பு உரிமையை ரூ.25 கோடிக்கு நெட்பிளிக்ஸ் நிறுவனத்திற்கு விற்றிருந்தனர். இதனால் இவர்களின் ஆடம்பரச் செலவுகள் அனைத்தினையும் நெட்பிளிக்ஸ் நிறுவனமே ஏற்றுக் கொண்டது.

இந்த நிலையில் விக்னேஷ் சிவன் தங்களது ஒப்பந்தத்தை மீறி திருமண புகைப்படங்களை வெளியிட்டமையால் கோபமடைந்த நெட்பிளிக்ஸ் நிறுவனம் நயன்-விக்கி திருமண விடியோவை ஒளிபரப்பு செய்யும் ஒப்பந்தத்தை ரத்து செய்துள்ளதாகவும், அத்தோடு அவர்கள் இருவருக்கும் நோட்டீஸ் ஒன்றினை அனுப்பியுள்ளதாகவும் கூறப்படுகின்றது. அதுமட்டுமல்லாது திருமணத்திற்கான செலவுத் தொகை மற்றும் திருமண வீடியோவிற்கான செலவுத் தொகையையும் திரும்பிச் செலுத்த வேண்டும் எனவும் கட்டளை இட்டுள்ளனர்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement