தென்னிந்திய சினிமாவின் நம்பர் 1 நடிகையாக இருக்கும் நயன்தாராவுக்கும் இயக்குநர் விக்னேஷ் சிவனுக்கும் கடந்த ஜூன் 9ஆம் திகதி சம்மதத்துடன் இந்து மத முறைப்படி திருமணம் செய்துள்ளனர்.
இவர்கள் திருமணத்தில் பல பிரபலங்களும் அரசியல்வாதிகளும் கலந்து கொண்டு வாழ்த்தினர். திருமணம் முடிந்த அடுத்த நாளே திருப்பதிக்கு சென்று ஏழுமலையானை தரிசனம் செய்தனர்.
நயன் விக்கி தம்பதியினர் தங்களுடைய காதலை அன்பை பரிசுகள் மூலம் வெளிப்படுத்தினர். அதுமட்டுமன்றி இவர்கள் திருமணத்தை முன்னிட்டு ஆதரவற்ற குழந்தைகளுக்கு மதிய உணவையும் வழங்கியுள்ளனர்.
இந்நிலையில் இவர்கள் இருவரும் சென்னையில் ஹோட்டல் ஒன்று பத்திரிகையாளர்களை சந்தித்தனர் அப்போது பேசிய விக்கி மற்றும் நயன் உங்களது ஆசிர்வாதம் எப்போதும் எங்களுக்கு வேண்டும் என்றும் கூறியிருந்தனர். தொடர்ந்து பேசிய விக்னேஷ் சிவன் இதே ஹோட்டலில் தான் முதன்முதலாக கதை சொல்வதற்காக நயன்தாராவை சந்தித்தேன்.
தற்போது மீண்டும் தம்பதியாக உங்களை சந்திப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது உங்களது ஆதரவும் ஆசிர்வாதமும் தொடர்ந்து எங்களுக்கு வேண்டும் என்றார். அப்போது பத்திரிகையாளர் ஒருவர் எப்போது ஹனிமூன் போக போறீங்க என்று கேள்வி எழுப்பினார் இதனை சற்றும் எதிர்பார்க்காத விக்னேஷ் மற்றும் நயன் இருவரும் சேர்ந்து வெட்கப்பட்டு அங்கிருந்து நகர்ந்தனர்.
நடிகை நயன்தாரா பல படங்களில் கமிட் ஆகி இருப்பதால் அதற்காக எந்த முடிவும் எடுக்கவில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
பிற செய்திகள்:
- வீட்ல விசேஷங்க திரைப்படத்தின் ப்ரமோஷனுக்காக சீரியலில் நடிக்கும் படக்குழுவினர் -எந்த சீரியலில் தெரியுமா?
- இதயத்தை திருடாதே சீரியல் நடிகை ஹீமா பிந்துவின் கண்னை கவரும் அழகான போட்டோ ஷுட்
- இசைப்புயல் ஏ.ஆர் ரகுமானின் மகளது திருமண வரவேற்புப் புகைப்படங்கள்
சமூக ஊடகங்களில்:
- Facebook : சினிசமூகம் முகநூல்
- Twitter: சினிசமூகம் ட்விட்டர்
- Instagram : சினிசமூகம் இன்ஸ்டாகிராம்
- YouTube : சினிசமூகம் யு டியூப்
Listen News!