தமிழ் சினிமாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகைகளில் முதலிடத்தை இன்றுவரை பிடித்திருப்பவர் தான் நடிகை நயன்தாரா.ஆனால் சில நாட்களுக்கு முன்னர் 'தி லெஜெண்ட்' படத்தின் நாயகி ஊர்வசி ரவுத்தலே முதல் இடம் என செய்தி வெளியானதில் தற்போது அதன் உண்மை தன்மை வெளியாகி உள்ளது.
பிரபல தொழிலதிபர் சரவணன் அருள் 'தி லெஜெண்ட்' எனும் படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானார். இந்த படத்தில் நடிகர் விஜயகுமார், பிரபு, மயில்சாமி, யோகிபாபு, விவேக், ரோபோ சங்கர் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருந்தது.
மேலும் 5 மொழிகளில் பான் இந்தியா படமாக உருவான இந்த படத்தில் சரவணன் அருளுக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை ஊர்வசி ரவுத்தலே நடித்திருந்தார். ஜூலை 28-ந் தேதி உலகம் முழுவதும், 2500 திரையரங்குகளில் ரிலீஸ் செய்யப்பட்ட இப்படம் வெளியானது முதல் கலவையான விமர்சனங்களையே பெற்றுள்ளது.
அனைத்து தரப்பினரையும் கதையும், சரவணன் அருளின் கதாபாத்திரமும் கவரவில்லை என்றாலும், படத்திற்கு பல கோடி பணத்தை ஒரு தயாரிப்பாளராகவும் வாரி இறைத்துள்ளார் சரவணன் அருள் என ரசிகர்கள் கூறிவருகிறார்கள்.
அதே போல் இந்த படத்தில் கதாநாயகியாக நடிக்க, பாலிவுட் நடிகை ஊர்வசி ரவுத்தலேவுக்கு சம்பளமாக 20 கோடி வழங்கப்பட்டதாக தகவல் வெளியானது. எனவே அதிக பட்சமாக தென்னிந்திய திரையுலகில் நடிகை நயன்தாரா 10 கோடி வரை சம்பளமாக பெற்று வரும் நிலையில், அவரை மிஞ்சும் விதத்தில் இரண்டு மடங்கு ஊர்வசி சம்பளம் வாங்கினார் என்றும் தகவல்கள் கசிந்தது.
எனவே, அதிக சம்பளம் பெரும் தமிழ் நடிகை பட்டியலில் இருந்து நயன்தாரா பின்னுக்கு தள்ளப்பட்டு வைத்ததாகவும், அந்த இடத்தை ஊர்வசி கைப்பற்றியதாகவும் கூறப்பட்டது.
இந்நிலையில் ஊர்வசி ரவுத்தலே தரப்பினர் இப்படி பரவி வரும் தகவல் முற்றிலும் வதந்தி என்றும், 20 கோடி சம்பளம் வாங்க வில்லை, 10 கோடிக்கும் குறைவான கணிசமான தொகையை ஊர்வசி ரவுத்தலே சம்பளமாக பெற்றதாக கூறப்பட்டுள்ளது.
மேலும் இந்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளதால், மீண்டும் நயன்தாரா அதிக சம்பளம் வாங்கும் நடிகை என்கிற முதல் இடத்தை கைப்பற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
பிற செய்திகள்
- தனுஷை போலவே இசை வெளியீட்டு விழாவில் கெத்து காட்டிய மகன்கள்- அனிருத் போட்ட குத்தாட்டம்-வைரலாகும் வீடியோ..!
- யாருப்பா இந்த கிளியோபாற்றா…. நாஞ்சில் விஜயன் வெளியிட்ட வீடியோவுக்கு லைக்ஸ்களை அள்ளிக்குவிக்கும் ரசிகர்கள்..!
- என்னம்மா இது..முழு அங்கத்தையையும் காட்டும் வகையில் வீடியோ வெளியிட்ட ஷெரின்
- வீட்டுக்கு வந்து பாக்கியா கொடுத்த அதிர்ச்சி.. மிரண்டு போன குடும்பத்தினர் – இன்றைய முழு எபிசோடு அப்டேட்
- பங்ஷனில் கண்ணம்மா கொடுத்த ஷாக் – பாரதி கண்ணம்மா மற்றும் ராஜா ராணி மெகா சங்கமம் எபிசோட் அப்டேட்
சமூக ஊடகங்களில்:
- Facebook : சினிசமூகம் முகநூல்
- Twitter: சினிசமூகம் ட்விட்டர்
- Instagram : சினிசமூகம் இன்ஸ்டாகிராம்
- YouTube : சினிசமூகம் யு டியூப்
Listen News!