• Sep 20 2024

மீண்டும் இணையவுள்ள நயன்தாரா மற்றும் சமந்தா-அதுவும் பேய் படத்தில் தான் நடிக்க போகின்றார்களாம்

stella / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகைகளாக வலம் வருபவர்கள் சமந்தா மற்றும் நயன்தாரா. இவர்கள் இருவரும் இணைந்து காத்துவாக்கில ரெண்டு காதல் என்னும் திரைப்படத்தில் நடித்திருந்தனர். இந்தத் திரைப்படம் அண்மையில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.

இதனைத் தொடர்ந்து நயன்தாரா 02 என்னும் திரைப்படத்தில் சோலோ ஹீரோயினாகவும் சமந்தா யசோதா ,சகுந்தலம் ஆகிய திரைப்படங்களிலும் நடித்து வருகின்றார்.

இந்நிலையில், தற்போது புதிதாக உருவாகவுள்ள பேய் படத்தில் நடிக்க நயன்தாரா மற்றும் சமந்தாவிடம் கேட்டுள்ளார்களாம். இதில் நயன்தாரா அல்லது சமந்தா இருவரில் ஒருவர் கண்டிப்பாக இப்படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நடிப்பார்கள் என்று கூறப்படுகிறது.

மேலும் இவர்கள் இருவரினதும் கூட்டணி மீண்டும் அமைந்தால் நன்றாகத் தான் இருக்கும் என ரசிகர்கள் கூறி வருவதைக் காணலாம்.

பிறசெய்திகள்:

சமூக ஊடகங்களில்:

Facebook : சினிசமூகம் முகநூல்
Twitter: சினிசமூகம் ட்விட்டர்
Instagram : சினிசமூகம் இன்ஸ்டாகிராம்
YouTube : சினிசமூகம் யு டியூப்

Advertisement

Advertisement