தென்னிந்திய சினிமாவில் பிரபல நட்சத்திரத் தம்பதிகளாக வலம் வருபவர்கள் நயன் - விக்கி. 'நானும் ரெளடிதான்' என்ற படத்தில் நடித்த போது இருவருக்கும் இடையே மலர்ந்த காதல் நாளுக்கு நாள் அதிகரித்து கடைசியில் கல்யாணத்தில் முடிந்தது. நயன்-விக்கி தம்பதியினர் காதலித்த காலம் முதல் கல்யாணத்திற்குப் பின்னரும் பல இடங்களுக்கு சுற்றுலா சென்று வருவதை வழக்கமாக வைத்துள்ளனர்.
இந்நிலையில் இவர்கள் நேற்று கும்பகோணம் அடுத்த மேலவழுத்தூரில் உள்ள கிராமத்தில் இருக்கும் ஆற்றங்கரை காமாட்சி அம்மன் ஆலயத்திற்கு வழிபாட்டிற்காக சென்றிருந்தனர். நயன்தாரா வருகை தந்ததை அறிந்த ரசிகர்கள் பலரும் அங்கு திரண்டு விட்டனர். இதனால் அங்கு நயன்தாராவால் நிம்மதியாக வழிபாட்டில் ஈடுபட முடியவில்லை.
பின்பு அம்மன் ஆலயத்தில் வழிபாட்டை முடித்த கையோடு, ஐராதீஸ்வர் ஆலயத்திற்கு சென்றனர். அங்கும் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவை காணவேண்டும் என்ற ஆசையுடன் ரசிகர்களுடன் இணைந்து தாய்மார்கள் பலரும் காத்திருந்தனர்.
வழிபாடுகள் முடித்த பின் அவர்களை சந்தித்து புகைப்படம் எடுத்துக்கொண்ட நயன்தாரா தோளில், ரசிகை ஒருவர் கை வைத்ததால் நயன்தாரா மிகவும் கோபமடைந்தார். அதுமட்டுமல்லாது இதன்பின் ரயில் நிலையத்திற்கு சென்ற நயன்தாரா, ரயிலில் ஏறியபின் அங்கு இருந்து ரசிகர் ஒருவர் நயன்தாராவை புகைப்படம் எடுக்க முயற்சி செய்தார்.
அந்த சமயத்திலும் கடுப்பான நயன்தாரா, போட்டோ எடுத்தவரை பார்த்து 'செல்போனை உடைத்துவிடுவேன்' எனக் கத்தி இருக்கின்றார். இந்த விடயமானது தற்போது சமூக வலைத்தளங்களில் பேசு பொருளாக மாறி இருக்கின்றது.
Listen News!