தமிழ் சினிமாவில் உச்ச நடிகையாக இருப்பவர் நடிகை நயன்தாரா, இவரது நடிப்பில் இறுதியாக கனெக்ட் vன்னும் திரைப்படம் வெளியாகியிருந்தது. இப்படத்தில் நயன்தாராவுடன் வினய், சத்யராஜ், அனுபம் கெர் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இந்தப் படத்தை சரவணன் அஷ்வின் இயக்கியிருந்தார். ஆனால் இப்படம் எதிர்பார்த்த அளவுக்கு கை கொடுக்கவில்லை.
இதனை தொடர்ந்து ஜெயம் ரவியுடன் இறைவன் என்ற படத்திலும் ஹிந்தியில் ஷாருக்கானுக்கு ஜோடியாக ஜவான் படத்திலும் நடித்து வருகிறார் நயன்தாரா. இதனிடையே திருச்சிற்றம்பலம் பட இயக்குநரான மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் கமிட் ஆகியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
நேற்று முன்தினம் கல்லூரி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று மாணவர்களுக்கு அறிவுரை வழங்கிய இவர் தற்பொழுது நடிகர் அஜித் மீது கடும் கோபத்தில் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது காரணம் ஏகே 62 விவகாரத்தில் அஜித்துக்கும் விக்னேஷ் சிவனுக்கும் ஏற்பட்ட பிரச்சனைதான் என்கிறார்கள் கோடம்பாக்கத்தினர்.
ஏகே 62 படத்தை இயக்குநர் விக்னேஷ் சிவன்தான் இயக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டது. லைகா புரடெக்ஷன் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைப்பார் என்றும் அரவிந்த் சாமி வில்லனாகவும் நடிகர் சந்தானம் நகைச்சுவை கதாப்பாத்திரத்திலும் நடிக்க உள்ளதாக கூறப்பட்டது. ஆனால் விக்னேஷ் சிவன் கூறிய கதையில் திருப்தியில்லாததால் இயக்குநரை மாற்றுமாறு அஜித் கூறியதாக தகவல் வெளியானது. இந்த தகவல் அரசல்புரசலாக இருந்த நிலையில் இயக்குநர் விக்னேஷ் சிவன் தனது சமூக வலைதள பக்கங்களில் ஏகே 62 படம் குறித்து ஷேர் செய்திருந்த பதிவுகளை நீக்கினார்.
இதனால் ஏகே 62 படத்தில் விக்னேஷ் சிவன் இல்லை என்பது உறுதியானது. இதனால் கடுப்பான நடிகை நயன்தாரா எத்தனை கோடிகள் கொடுத்தாலும் இனி அஜித்துடன் நடிக்கப் போவதில்லை என முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தனது கணவரை புறக்கணித்தவர்களுடன் இனி இணைந்து பணியாற்ற போவதில்லை என்ற முடிவில் நயன்தாரா உள்ளதாக கூறப்படுகிறது. இந்த தகவல் எந்த அளவுக்கு உண்மை என்று தெரியவில்லை. ஆனால் இதுதான் தற்போது கோலிவுட்டில் ஹாட் டாப்பிக்காக உள்ளது.
Listen News!