தமிழ் சினிமாவில் காமெடி மற்றும் கமர்ஷியல் திரைப்படங்களை இயக்கி வருபவர் இயக்குநர் சுந்தர். சி. இவர் இயக்கத்தில் வெளியான வின்னர் ,கலகலப்பு, அரண்மனை ஆகிய திரைப்படங்கள் ரசிகர்களிடையே அதிகளவான வரவேற்பைப் பெற்றிருக்கின்றன.
இந்த நிலையில் இவர் இயக்கத்தில் தற்பொழுது ஒரு புதிய படம் உருவாகி வருகின்றது. இந்த படத்தில் ஜீவா, ஜெய் மற்றும் ஸ்ரீகாந்த் ஆகிய மூவரும் கதாநாயகன்களாக நடித்து வருகின்றனர். இந்த நிலையில் இவரது படத்தில் நடிக்கும் வில்லன் நடிகர் பற்றி புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
அதாவது முருகதாஸ் இயக்கிய பாலிவுட் படத்தில் சோனாக்ஷி சின்ஹாவுக்கு வில்லனாக நடித்தவர் தான் அனுராக் காஷ்யப். இயக்குநரான இவர் தமிழில் நயன்தாரா, அதர்வா ஆகியோர் நடிப்பில் உருவான இமைக்கா நொடிகள் படத்திலும் வில்லனாக தோன்றியிருந்தார்.
இந்நிலையில் இப்போது சுந்தர் சி கதாநாயகனாக நடிக்க உள்ள படத்தில் வில்லனாக நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த திரைப்படத்தை திரிஷா நடித்த பரமபத விளையாட்டு திரைப்படத்தை இயக்கிய இயக்குநர் திருஞானம் இயக்கி வருகிறார். இந்த படத்துக்கு ’ஒன் டு ஒன்’ என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.
இதற்கான பேச்சுவார்த்தைகள் தற்போது நடந்துவரும் நிலையில் விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பிறசெய்திகள்:
- OTT தளத்தில் வெளியாகப்போகும் KGF- 2 படம்- பெரிய தொகை கொடுத்து வாங்க போட்டி போடும் நிறுவனங்கள்..!
- ‘ஹிந்தி சினிமாவில் நடித்து எனது நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை’- சர்ச்சைக்குரிய கருத்தினை கூறிய மகேஷ்பாபு
- கடும் வெயிலில் ஓட வைத்த இயக்குநர் பாலா-கோபத்தில் வீட்டுக்குக் கிளம்பிய சூர்யா
- தளபதி 66 இல் விஜய்யுடன் இணைந்த முன்னணி நட்சத்திரங்கள்.. முழு லிஸ்ட்
- மாடர்ன் உடையில் ரசிகர்களை கவர்ந்த தமன்னா-லேட்டஸ்ட் கிளிக்ஸ்
- சக்தி சொன்ன வார்த்தைகளால் உச்ச கட்ட பதற்றத்தில் பாரதி- ஆறுதல் சொன்ன சௌந்தர்யா
சமூக ஊடகங்களில்:
- Facebook : சினிசமூகம் முகநூல்
- Twitter: சினிசமூகம் ட்விட்டர்
- Instagram : சினிசமூகம் இன்ஸ்டாகிராம்
- YouTube : சினிசமூகம் யு டியூப்
Listen News!