தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் நடிகை நயன்தாரா.இவர் நடிக்கும் படங்கள் அனைத்துமே வசூலில் அள்ளிக்குவித்து வருகின்றது.
இவ்வாறுஇருக்கையில் இவர் கடந்த ஜுன் மாதம் தனது காதன் விக்னேஷ் சிவனைத் திருமணம் செய்து கொண்டார். இதனை அடுத்து கடந்த அக்டோபர் 9-ஆம் தேதி தமக்கு இரட்டை ஆண் குழந்தை பிறந்துள்ளளதாக அறிவித்திருந்தனர்.பல சர்ச்சைகளின் பின்னர் இந்த குழந்தை விவகாரம் தற்பொழுது முடிவுக்கு வந்துள்ளது
இவ்வாறு தனிப்பிட்ட வாழ்க்கையை தவித்து திரையுலக வாழ்க்கையிலும் பிஸியாகவே காணப்படும் இவர் குறித்து புதிய அப்டேட் ஒன்று வெளியாகி உள்ளது.அதாவது இவர் நடிப்பில் அடுத்ததாக கோல்ட், கனெக்ட் ஆகிய திரைப்படங்கள் திரைக்கு வரவிருக்கிறது. இதை தொடர்ந்து இறைவன், நயன்தாரா 75 ஆகிய படங்கள் தயாராகி வருகிறது.
இவ்வாறுஇருக்கையில், நடிகை நயன்தாரா புதிதாக ஒரு படத்தை கமிட் செய்துள்ளாராம். கதையின் நாயகியாக நயன்தாரா நடிக்கவிருக்கும் இப்படத்தை கே.ஜி.எப், காந்தாரா ஆகிய படங்களை தயாரித்த ஹோம்பலே பிலிம்ஸ் தான் தயாரிக்கவிருக்கிறாம்.
அத்தோடு பிரமாண்டமாக தயாராகும் இப்படத்தில் இப்படத்தின் அறிவிப்பு விரைவில் படக்குழுவிடம் இருந்து வெளியாகவும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Listen News!