• Sep 21 2024

சந்தர்ப்பம் பார்த்து நடிகர் சிம்புவை பழிவாங்கிய நயன்தாரா-விஷயம் தெரியாமல் மாட்டிய ரி ஆர். ராஜேந்தர்

stella / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் முன்னணி வகிக்கும் நடிகை நயன்தாரா கடந்த 2006ஆம் ஆண்டு நடிகர் சிம்புவுடன் வல்லவன் என்ற படத்தில் நடித்தார். அப்போது நடிகர் சிம்புவுக்கும் நடிகை நயன்தாராவுக்கும் இடையே காதல் ஏற்பட்டு அவர்கள் ஒன்றாக இருந்த புகைப்படங்களும் சமூக வலைதளங்களில் வைரல் ஆகின.

அந்த வகையில் இவர்கள் இருவரும் காதலித்து வருவதாகவும் திருமணம் செய்து கொள்ளப் போவதாகவும் கூறி வந்தனர். ஆனால் இருவரும் காதலிக்கவே இல்லை என்று கூறி பிரிந்துவிட்டனர். இவர்களுக்கு இடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டதாகவும் இதனால் அந்த முடிவு எடுக்கப்பட்டதாகவும் சொல்லப்படுகின்றது.

தொடர்ந்து நடிகர் சிம்புவை பழிவாங்கும் நோக்கத்திலேயே அவருக்கு நெருங்கிய ஒருவரைத்தான் திருமணம் செய்து கொள்வேன் என்று சவால் விட்டதாக கூறிய நயன்தாரா, அதற்காகத்தான் சிம்புவின் நெருங்கிய நண்பரான விக்னேஷ் சிவனை காதலித்ததாகவும் சமூக வலைத்தளங்களில் கருத்துக்கள் வெளியாகின.

விட்ட சவாலை செய்த நடிகை நயன்தாரா தனது திருமண பத்திரிகை முதன்முதலில் சிம்புவின் அப்பாவிடம் தான் கொடுத்தாராம். இதற்கு காரணம் தனக்கு திருமணம் என்று சிம்புவுக்கு தெரிய வேண்டும் என்பதே இவர் நோக்கம்.

இதனை கேள்விப்பட்ட சிம்பு தன்னை பழி வாங்குவதற்காக தான் நயன்தாரா இந்த பத்திரிகை தனது அப்பாவிடம் கொடுத்துள்ளார், ஆனால் இது தெரியாமல் என்னுடைய அப்பா இந்த பத்திரிகையை வாங்கியுள்ளார். இதனால் தற்போது சிம்பு தனது தந்தை மீது கோபமாக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த நிலையில் நடிகர் சிம்புவுக்கு சினிமாவில் நல்ல வரவேற்பு கிடைத்து கொண்டிருப்பதால் இந்த சந்தர்ப்பத்தை சரியாக பயன்படுத்தி வரும் நாட்களில் திருமணம் குறித்து நல்ல முடிவை எடுப்பார் என எதிர்பார்க்கப்படுகின்றது

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement