• Sep 20 2024

ஜெயம் ரவியுடன் கூட்டணி அமைக்கும் நயன்தாரா- அட இந்தப் படம் இந்த முறையில் தான் உருவாகவுள்ளதாம்

stella / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் அறிமுகமாகி காலத்திலிருந்து தற்போதைய காலம் வரை அழகான நடிகராக வலம் வருபவர் நடிகர் ஜெயம் ரவி. தனது துடிதுடிப்பான நடிப்பினால் இளம் புயல் என்ற பட்டத்தையும் தனதாக்கிக் கொண்டவர். இவருக்கென்று தனி ரசிகர் பட்டாளமும் காணப்படுகின்றது.

இவரது நடிப்பில் இறுதியாக வெளியாகிய பூமி திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றதை அடுத்து தற்பொழுது பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் முக்கிய வேடத்திலும் அகிலன் திரைப்படத்தில் கதாநாயகனாகவும் நடித்து வருகின்றார்.

இந்த நிலையில் தற்பொழுது ஒரு புதிய தகவல் வெளியாகியுள்ளது. அதாவது இவர் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையான நயன்தாராவுடன் இணைந்து புதிய படத்தில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகின்றது. இவர்கள் இருவரும் ஏற்கனவே தனி ஒருவன் திரைப்படத்தில் ஒன்றாக நடித்தவர்கள்.

இந்நிலையில், 7 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் ஜெயம் ரவி - நயன்தாரா கூட்டணி அமைந்துள்ளது. , அஹமத் இயக்கத்தில் உருவாகவிருக்கும் புதிய படத்தில் நயன்தாராவும், ஜெயம் ரவியும் இணைந்து நடிக்கிறார்கள். இதை ஜெயம் ரவி ஒரு நேர்காணலில் வெளிப்படையாக கூறியுள்ளார்.

மேலும், இப்படம் ஒரு திரில்லர் கதைக்களத்தில் உருவாகிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார். விரைவில் படக்குழுவிடம் இருந்து இப்படத்திற்கான அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement