• Sep 21 2024

திருமணத்தின் பின் படவாய்ப்புக் குவிந்ததால் நயன்தாரா எடுத்த திடீர் முடிவு- கடும் குழப்பத்தில் ரசிகர்கள்

stella / 2 years ago

Advertisement

Listen News!

நானும் ரௌடி தான் என்னும் திரைப்படத்தின் மூலம் நண்பர்களாகி பின்பு ஏழு வருடங்கள் காதலர்களாக இருந்து கடந்த ஜுன் மாதம் 9ம் திகதி திருமண பந்தத்தில் இணைந்த நட்சத்திர தம்பதியினர் தான் நயன்தரா மற்றும் விக்னேஷ் சிவன். திருமணத்தை அடுத்து தேன் நிலவினைக் கொண்டாட தாய்லாந்துக்கு சென்றனர்.

தேன் நிலவைக் கொண்டாடிய இவர்கள் நாடு திரும்பியதும் படு பிஸியாக படப்பிடிப்பில் கலந்து கொண்டு வருகின்றனர்.அந்த வகையில் நயன்தாரா இப்பொழுது ஷாருகானின் ஜவான் படத்தில் நடிப்பதற்காக மும்பைக்குச் சென்று விட்டார்.இப்படத்தினை இயக்குநர் அட்லி இயக்கி வருகின்றார்.

இதையடுத்து இந்த வார இறுதியில் சென்னை திரும்புகிறார். சென்னை திரும்பிய கையோடு ஜெயம் ரவி பட ஷூட்டிங்கில் கலந்து கொள்கிறார். அந்த படத்தை அகமது இயக்கி வருகிறார். அந்த படத்தின் ஒரு ஷெட்யூல் புதுச்சேரியில் நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போதைக்கு லேடிசூப்பர் ஸ்டார் 75 என்று அழைக்கப்படும் அந்த படத்திற்கு ஜூலை 12ம் தேதி பூஜை போட்டார்கள். நிலேஷுக்கு போன் செய்து வாழ்த்தியதுடன், ஆசியும் வழங்கியிருக்கிறார் ரஜினி. அந்த படத்தின் ஷூட்டிங் ஆகஸ்ட் மாதம் முதல் வாரம் ஆரம்பமாகவுள்ளது.

நிலேஷ் கிருஷ்ணாவின் படத்தை அடுத்து விக்னேஷ் சிவன் இயக்கத்தில் அஜித் குமார் ஜோடியாக ஏ.கே. 62 படத்தில் நடிக்க இருக்கின்றார். கை நிறைய படங்கள் வைத்திருப்பதால் தற்போதைக்கு குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டாம் என்று விக்னேஷ் சிவனிடம் கூறியிருக்கிறாராம் நயன்தாரா. இந்த தகவல் ரசிகர்களை அதிர்ச்சிக்கு உட்படுத்தியுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement