• Sep 20 2024

சூப்பர் ஸ்டார் வீட்டுக்கு அருகே ரூ. 119 கோடி மதிப்பிலான பங்களாவை வாங்கிய தீபிகா படுகோன் மற்றும் ரன்வீர் சிங்

stella / 2 years ago

Advertisement

Listen News!

பாலிவூட்டில் பல நட்சத்திர தம்பதிகள் இருக்கின்றனர். இவர்களில் மிகவும் முக்கியமானவர்கள் தான் ரன்வீர் சிங் மற்றும் தீபிகா படுகோன். பாலிவூட்டில் முன்னணி நட்சத்திரங்களாக விளங்கும் இவர்கள் இருவரும் கெரியரைப் பொறுத்த வரையிலும் மிகவும் பிஸியானவர்களாகவே வலம் வருகின்றனர்.

அந்த வகையில் ரோஹித் ஷெட்டி இயக்கத்தில் ரன்வீர் சிங், சாரா அலி கான் நடித்த சிம்பா திரைப்படம் அண்மையில் வெளியாகி சூப்பர் ஹிட் வெற்றி பெற்றது. இதனைத் தொடர்ந்து சர்கஸ் என்னும் படத்தில் இரட்டை வேடத்தில் நடித்து வருகின்றார். இது ரன்வீர், ரோஹித் கூட்டணியின் இரண்டாவது படமாகும்.

இப்படத்தில் ஜாக்குலின் பெர்ணான்டஸ், பூஜா ஹெக்டே, வருண் ஷர்மா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள்.ரிலையன்ஸ் என்டர்டெயின்மென்ட் மற்றும் டி சீரிஸ் நிறுவனம் சேர்ந்து தயாரிக்கும் சர்கஸ் படம் இந்த ஆண்டு கிறிஸ்துமஸ் பண்டிகை ஸ்பெஷலாக ரிலீஸாகவிருக்கிறது.

இது தவிர கரண் ஜோஹரின் ராக்கி அவுர் ராணி கி பிரேம் கஹானி படத்திலும் நடித்து வருகிறார். அந்த படத்தில் ரன்வீர் ஜோடியாக ஆலியா பட் நடிக்கிறார். இந்த நிலையில் இவர் தனது மனைவி தீபிகாவுடன் இணைந்து மும்பையின் முக்கிய இடமான பாந்த்ராவில் ரூ. 119 கோடி மதிப்பிலான வீடு ஒன்றை வாங்கியுள்ளார்களாம்.

சல்மான் கான் மற்றும் ஷாருக்கானின் வீடுகளுக்கு பக்கத்தில் இவர்களது புதிய வீடு உள்ளதாம். இந்த புதிய வீட்டின் பத்திர பதிவிற்கு மட்டுமே ரன்வீர் சிங் ரூ. 7 கோடி செலவு செய்துள்ளார்களாம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்

Advertisement

Advertisement