• Sep 20 2024

கணவனின் குழப்பத்தால்.... மாறிப்போன மணப்பெண்... பதறிய கோபிநாத்... சூப்பரான 'Neeya Naana' ப்ரோமோ வீடியோ..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ஹிட் நிகழ்ச்சிகளில் ஒன்று 'நீயா நானா'. இந்த நிகழ்ச்சிக்கு என்று தனி ரசிகர் கூட்டமே உண்டு. அந்த அளவிற்கு மக்கள் மனதில் தனி இடத்தை பிடித்துள்ளது.


இந்த நிகழ்ச்சியை பல ஆண்டுகளாக கோபிநாத் தொகுத்து வழங்கி வருகிறார். தொடர்ந்து பல சுவாரஸ்யமான தலைப்பின் கீழ் நடைபெற்று வரும் இந்த நிகழ்ச்சியில் இந்த வாரம் "Twins-திருமணத்திற்குப் பின்னர் என்ன நடக்கிறது" என்ற தலைப்பின் கீழ் விவாதம் நடைபெறவுள்ளது.


இந்நிலையில் தற்போது ப்ரோமோ வீடியோ வெளியாகி இருக்கின்றது. அதில் ஒரு பெண் கூறுகையில் "தன்னுடைய கல்யாணமே குழப்பத்தில் தான் நடந்தது" எனத் தெரிவிக்கின்றார். அதாவது "என் கணவன் கிட்ட நான் தனியாக பேசணும் என்று கேட்டேன், அவங்க வந்தாங்க பேர் என்னன்னு கேட்டாங்க, நானும் சுனிதா என்று சொன்னேன், ஆனால் அவங்க போய் அவங்க அம்மா கிட்ட சொன்னது சுனந்தா என்று, திருமண அழைப்பிதழ் அடிக்கும் வரைக்கும் சுனந்தா தான் பொண்ணு என்று எங்க மாமியார் நினைச்சிட்டார்" எனக் கூறுகின்றார்.


இதனைக் கேட்டதும் கோபிநாத் "ஐயையோ" எனப் பதறுகின்றார், இதனைப் பார்த்த அரங்கமே விழுந்து விழுந்து சிரிக்கின்றது.   


Advertisement

Advertisement