தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநராக வலம் வரும் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் இறுதியாக வெளிவந்த திரைப்படம் தான் பீஸ்ட். இப்படம் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றியைப் பெறவில்லை என்பதோடு விமர்சன ரீதியாகவும் மோசமான கருத்துக்களைப் பெற்றது.
இதனைத் தொடர்ந்து தற்பொழுது ரஜினியை வைத்து தலைவர் 169' படத்தை இயக்குவதாக உத்தியோகபூர்வமாக அறிவித்திருந்தார்.இப்படத்திற்கு அனிரூத் இசையமைக்கவுள்ளார். மேலும் பீஸ்ட் படம் தோல்வியைச் சந்தித்ததால் இப்படத்திற்கான எதிர்பார்ப்பானது ரசிகர்களிடையே குறைவடைந்துள்ளது.
இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பாக 'தலைவர் 169' படத்தில் கே.எஸ். ரவிக்குமார் இணைந்துள்ளதாகவும், திரைக்கதை அமைப்பில் நெல்சனுடன் சேர்ந்து அவர் பணியாற்றவுள்ளதாகவும் இணையத்தில் செய்திகள் பரவியது.
ஆனால் இந்த வதந்திகள் குறித்தெல்லாம் கவலைப்படாமல் நெல்சன் 'தலைவர் 169' பணிகளில் படு மும்முரமாக ஈடுபட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ‘பீஸ்ட்’ படத்தில் வந்த நெகட்டிவ் விமர்சனத்தை எல்லாம் 'தலைவர் 169' படத்தில் சரிகட்ட நெல்சன் தீயாக வேலை செய்து வருவதாக செய்திகள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை கிளப்பியுள்ளது.
Listen News!