• Sep 20 2024

ஜெயிலர் படம் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து சம்பளத்தை கிடுகிடுவென உயர்த்திய நெல்சன் திலீப்குமார்- இத்தனை கோடியா?

stella / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் கோலமாவு கோகிலா என்னும் திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகியவர் நெல்சன் திலீப்குமார். இப்படத்தில் கிடைத்த வெற்றியைத் தொடர்ந்து சிவகார்த்திகேயனை வைத்து டாக்டர் படத்தையும் இயக்கி இருந்தார். இப்படமும் சூப்பர் ஹிட் வெற்றி பெற்றதோடு வசூலிலும் அள்ளிக் குவித்தது.

இதனை அடுத்து நடிகர் விஜய்யை வைத்து பீஸ்ட் படத்தை இயக்கி இருந்தார். இப்படம் தோல்வியையும் சந்தித்தது. இதன் பின்னர் இறுதியாகத் தான் ரஜினியை வைத்து ஜெயிலர் படத்தை இயக்கி இருந்தார்.நெல்சனுக்கு மட்டுமல்லாமல் ரஜினிக்கும் ஜெயிலர் ஒரு காம்பாக் படமாக அமைந்தது.ஆகஸ்ட் 10 ஆம் தேதி வெளியான இப்படம் கடந்த மூன்று வாரங்களாக பல சாதனைகளை செய்து வருகின்றது.


 இதுவரை 500 கோடிக்கு மேல் வசூலித்த ஜெயிலர் படத்திற்குப் பிறகு  ரஜினி லால் சலாம், தலைவர் 170 என அடுத்தடுத்து படங்களில் நடித்து வருகின்றார். இதையடுத்து நெல்சனின் அடுத்த படம் என்ன என ரசிகர்கள் ஆவலாக கேட்டு வருகின்றனர். அந்த வகையில் நெல்சனின் அடுத்த படம் பற்றிய தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

இந்நிலையில் ஜெயிலர் படத்திற்கு பிறகு ரஜினி லால் சலாம், தலைவர் 170 என அடுத்தடுத்து படங்களில் நடித்து வருகின்றார். இதையடுத்து நெல்சனின் அடுத்த படம் என்ன என ரசிகர்கள் ஆவலாக கேட்டு வருகின்றனர். அந்த வகையில் நெல்சனின் அடுத்த படம் பற்றிய தகவல் தற்போது வெளியாகியுள்ளது.


நெல்சனுக்கு கிட்டத்தட்ட ஐம்பது கோடி வரை சன் பிக்சர்ஸ் சம்பளம் கொடுக்க தயாராக இருக்கின்றதாம். ஜெயிலர் படத்திற்காக 20 கோடி சம்பளம் வாங்கிய நெல்சன் தற்போது இரண்டு மடங்கு அதிகமான சம்பளத்தை தன் அடுத்த படத்திற்காக பெறப்போவதாக செய்திகள் வெளியாகி வருகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement