பீஸ்ட் படத்திற்கு பிறகு நெல்சன் திலீப்குமார் இயக்கி வரும் திரைப்படம் தான் ஜெயிலர்.இதில் ரஜினிகாந்த், தமன்னா, ரம்யா கிருஷ்ணன், சிவராஜ்குமார் உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்து வருகின்றார்கள்.இந்தப் படத்தின் சூட்டிங் சென்னையில் பிரம்மாண்டமான ஜெயில் செட் போடப்பட்டு விறுவிறுப்பாக நடைபெற்றது.
தொடர்ந்து மற்ற இடங்களிலும் சூட்டிங் நடைபெற்ற நிலையில், தற்போது ஜெயிலர் படத்தின் சூட்டிங் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.படம் மே மாதத்திலோ அல்லது தீபாவளியையொட்டியோ ரிலீசாகும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில் படத்தின் சூட்டிங்கை வரும் ஏப்ரல் மாதத்திற்குள் நிறைவு செய்ய திட்டமிட்டு நெல்சன் சூட்டிங்கை துரிதப்படுத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
முன்னதாக காந்தாரா படத்தின் சூட்டிங் நடத்தப்பட்ட பண்ணைவீட்டில் ஜெயிலர் படத்தின் சூட்டிங்கும் எடுக்கப்பட்ட நிலையில் படத்திற்கான எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்துள்ளது.அத்தோடு பான் இந்தியத் திரைப்படமாக உருவாகியுள்ள இப்படம் ரஜினியின் 169 படம் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இதனிடையே ஏப்ரல் 14ம் தேதி தமிழ் புத்தாண்டையொட்டி படத்தின் அடுத்த அப்டேட் வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. படத்தில் வித்தியாசமான கதைக்களத்துடன் ரசிகர்களை நெல்சன் அணுகுவார் என்றும் கூறப்பட்டுள்ளது.
Listen News!