• Sep 21 2024

நடிகைகள் இன்றி சக்சஸ் பார்ட்டியை கொண்டாடிய தனுஷ்... காரணம் என்ன..? வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்..!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் தனுஷ். இவர் நடிகர் மட்டுமல்லாது பின்னணிப் பாடகர், பாடலாசிரியர், திரைப்படத் தயாரிப்பாளர் எனப் பன்முகத் திறமை கொண்ட ஒருவராகவும் விளங்கி வருகின்றார். இவர் நடிப்பில் உருவான படங்களோ ஏராளம். 


இந்த வரிசையில் இவர் நடிப்பில் கடந்த வாரம் ரிலீசான படம் 'திருச்சிற்றம்பலம்'. மித்ரன் ஆர் ஜவகர் இயக்கத்தில் உருவாகி இருந்த இப்படத்தில் நடிகர் தனுஷ், உணவு டெலிவரி செய்யும் ஒருவராக நடித்திருந்தார்.

மேலும் இப்படத்தில் தனுஷின் அப்பாவாக பிரகாஷ் ராஜும், தாத்தாவாக பாரதிராஜாவும், காதலிகளாக ராஷி கண்ணா மற்றும் பிரியா பவானி சங்கரும், தோழியாக நித்யா மேனனும் தமது நடிப்பினை சிறப்பாக வெளிப்படுத்தி இருந்தார்கள்.


இவ்வாறாக ரசிகர்களின் பலத்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் ரிலீசான இப்படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்தது. இப்படம் பாக்ஸ் ஆபிஸிலும் மாபெரும் வெற்றியடைந்து வசூல் சாதனை நிகழ்த்தி வருகிறது. மேலும் இப்படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணம் இசையமைப்பாளர் அனிருத். அவரின் இசையில் வெளியான பாடல்கள் அனைத்தும் படத்துக்கு மிகப்பெரிய பலமாக அமைந்தன. படத்தை போலவே இப்பாடல்களும் ஹிட் ஆகி வருகின்றன.


அதுமட்டுமல்லாது தனுஷின் நடிப்பில் கடைசியாக வெளியான சில படங்கள் தோல்வியை தழுவியதால், இந்த படத்தின் வெற்றி அவருக்கு புத்துணர்ச்சியை தந்துள்ளது. இதனைத் தொடர்ந்து குறிப்பாக இப்படத்தின் உடைய வெற்றியால் அவர் நடிப்பில் அடுத்ததாக வெளியாக இருக்கும் 'நானே வருவேன், வாத்தி' போன்ற படங்களின் மீதான எதிர்பார்ப்பும் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணமே உள்ளது.


இந்நிலையில் 'திருச்சிற்றம்பலம்' படத்தின் சக்சஸ் பார்ட்டி சமீபத்தில் இடம்பெற்றிருந்தது. இதில் எந்த ஒரு ஹீரோயினும் பங்குபற்றவில்லை. இப்புகைப்படங்களை பார்த்த நெட்டிசன்கள் பலரும் "ஏன் அவர்களை அழைக்கவில்லையா? அல்லது அவர்கள் வரவில்லையா" எனக் கேள்விகளை கேட்டு வருகின்றனர்

Advertisement

Advertisement