• Sep 20 2024

ஆதிபுருஷ் திரைப்படத்தைப் புறக்கணிக்கும் தமிழ்நாட்டு ரசிகர்கள்... எல்லா இருக்கையும் அனுமாருக்கா..? கலாய்த்து தள்ளும் நெட்டிசன்கள்..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

ஓம் ரனாவத் இயக்கத்தில் பிரபாஸ் நடித்து நாளை மறுதினம் திரையரங்கில் வெளிவரவிருக்கும் திரைப்படம் ஆதிபுருஷ். ராமாயணத்தை மையமாக வைத்து இப்படத்தை உருவாக்கியுள்ளனர்.

இப்படத்தில் நடிகர் பிரபாஸ் ராமனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக சீதா கதபாத்திரத்தில் நடிகை கீர்த்தி சனோன் நடித்து இருக்கிறார். அத்தோடு இராவணனாக பாலிவுட் நடிகர் சையிப் அலிகான் நடித்துள்ளார். இவர்களுடன் இணைந்து இன்னும் பலரும் நடித்துள்ளனர்.


மேலும் 'ஆதிபுருஷ்' படத்தின் ஒவ்வொரு காட்சியிலும் திரையரங்கின் ஒரு இருக்கையை ஆஞ்சநேயருக்காக காலியாக விட போவதாக ஏற்கெனவே பட தயாரிப்பு நிறுவனம் அறிவிப்பு ஒன்றினை விடுத்துள்ளது. ஆதிபுருஷ் படக்குழுவின் உடைய இந்த அறிவிப்பு பாராட்டுக்கள் கிடைத்தாலும், மறுபுறம் இதனை நெட்டிசன்கள் பலரும் கடுமையாக ட்ரோல் செய்தும் வந்தனர்.

இந்நிலையில் பட ரிலீசிற்கு இன்னும் ஓரிரு நாட்களே உள்ள நிலையில், தமிழ்நாட்டில் புக்கிங் தொடங்கியுள்ளது. ஆனால் இன்னமும் அந்த படத்திற்கான டிக்கெட்டுகளை வாங்க ரசிகர்கள் யாரும் ஆர்வம் காட்டவில்லையாம். அதாவது டோலிவுட் மற்றும் பாலிவுட்டில் பல தியேட்டர்கள் ஹவுஸ்ஃபுல் ஆகி வருகின்றன.


அந்தவகையில் தமிழ்நாட்டு திரையரங்குகள் அனைத்தும் புக்கிங் தொடங்கி தற்போது பல மணி நேரம் ஆகியும் புக் ஆகாமல் இருப்பதாக கூறப்படுகின்றது. ஆகவே பிரபாஸ் படத்தை பார்க்கக் கூடாது என்பதனால் தான் தமிழ்நாட்டு ரசிகர்கள் அதனை புறக்கணித்து விட்டனரா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

அதுமட்டுமல்லாது அனுமாருக்காக அனைத்து சீட்களையும் தமிழ்நாடு தியேட்டர்கள் காலியாக வைத்திருப்பதாகவும் கூறி நெட்டிசன்கள் பலரும் கலாய்த்து வருகின்றனர்.

Advertisement

Advertisement