பிரம்மாண்ட தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் ஒன்று பிக்பாஸ். முதல் சீசனின் பெரிய வெற்றியை தொடர்ந்து 5 சீசன்கள் தொடர்ந்து ஒளிபரப்பாக இப்போது 6வது சீசனும் முடிவுக்கு வரப்போகிறது.
இந்த 6வது சீசனில் பிக்பாஸ் குழுவினர் போட்டியாளர்களை தேர்வு செய்வதில் கொஞ்சம் வித்தியாசம் காட்டியுள்ளனர், சில போட்டியாளர்கள் நமக்கு பரீட்சயப்படாதவர்களாக இருந்தனர்.இருப்பினும் இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு அனைவரும் தெரிந்த முகமாக மாறிவிட்டனர்.
மேலும் கடந்த வாரம் வீட்டை விட்டு வெளியேறிய போட்டியாளர்கள் மீண்டும் வருகை தந்து ஹவுஸ்மேட்ஸை உற்சாகப்படுத்தி வருகின்றனர். இப்படியான நிலையில் இறுதியாக இந்த வீட்டிலிருந்து ஏடிகே வெளியேறினார்.
இதனை அடுத்து இன்றைய தினம் வெளியாகிய முதலாவது ப்ரோமோவில் மகாநதி சீரியல் குழுவினர் தமது சீரியலை ப்ரோமோஷன் செய்வதற்காக வந்திருந்தனர். இவர்களைத் தொடர்ந்து தற்பொழுது சிறகடிக்க ஆசை சீரியல் கதாநாயகன் மற்றும் கதாநாயகி வருகை தந்து ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Listen News!