தமிழ் சினிமா ரசிகர்கள் பலரும் ஆவலுடன் எதிர்ப்பார்த்து காத்திருக்கும் படம் பொன்னியின் செல்வன் 2. இப்படம் வருகிற ஏப்ரல் 28ம் தேதி திரைக்கு வரவுள்ளது.இப்படத்தை காண உலகம் முழுவதும் உள்ள தமிழ் நெஞ்சங்கள் மிக ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
இந்த நிலையில் பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகத்திற்கு மிகப்பெரும் ஆபத்து ஒன்று வந்துள்ளது. ஆம், இந்த படம் ரிலிஸ் ஆகும் தருணத்தில் தான் ஐபில் போட்டிகள் நடந்தும் வருகிறது.
அத்தோடு இந்தியாவில் கொரோனா பாதிப்பு தற்போது அதிகரித்து வருகிறது, கூடிய விரைவில் பல கட்டுப்பாடுகள் வரலாம்.இதனால், கண்டிப்பாக இப்படத்தின் வசூலுக்கு பெரிய பாதிப்பு இருக்கும் என்று பாக்ஸ் ஆபிஸ் நிபுணர்கள் கணித்துள்ளனர்.
அத்தோடு இப்படம் வருகிற ஏப்ரல் 28-ந் தேதி தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் பிரம்மாண்டமாக ரிலீஸ் ஆக உள்ளது. இப்படத்தின் ப்ரமோஷன் பணிகளில் படக்குழுவினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Listen News!