• Sep 19 2024

பிரசாந்த் நீல் இயக்கத்தில் உருவாகும் சலார் படத்திலிருந்து வெளியாகிய புதிய அப்டேட்- செம குஷியில் ரசிகர்கள்

stella / 2 years ago

Advertisement

Listen News!


தென்னிந்தி சினிமா ரசிகர்களால் கொண்டாடப்படும் அளவுக்கு சூப்பர் ஹிட் படமான கே.ஜி.எப் திரைப்படத்தினை எடுத்த இயக்குநர் தான் பிரசாந்த் நீல். கன்னட இயக்குநரான இவரது இயக்கத்தில் கே.ஜி.எப் திரைப்படம் இரண்டு பாகங்களாக வெளியாகியது.

இவ் இரண்டு பாகங்களுமே சூப்பர் ஹிட் வெற்றி பெற்றது. பான் இந்திய அளவில் இப்படம் பேசப்பட்டது. இப்படத்தைத் தொடர்ந்து அடுத்த படத்துக்கான வேலைகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றார்.


அந்த வகையில் தற்பொழுது சலார் என்னும் படத்தை இயக்கி வருகின்றார்.இப்படத்தில் கதாநாயகனாக பாகுபலி புகழ் பிரபாஸ் கதாநாயகனாக நடித்து வருவதோடு கதாநாயகியாக ஸ்ருதிஹாசன் நடித்து வருகின்றார்.

இப்படத்தின் அப்டேடிற்காக  இந்திய ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கும் வேளையில், ஒரு முக்கிய அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. அதில், வரும் ஆகஸ்ட் 15 ஆம் தேதி,  75 வது சுதந்திர தினத்தன்று, பிற்பகல் 12:58 மணிக்கு சலார் படத்தின் புதிய அறிவிப்பு வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் ரசிகர்கள் மகிழ்ச்சியின் உச்சத்திற்கு சென்றுள்ளனர். இப்படம் வரும் 2023 ஆம் தேதி டிசம்பரில் ரிலீஸாக வாய்ப்புள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement