சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அடுத்ததாக தனது 169வது படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தினை இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கவுள்ளதோடு இப்படத்திற்கு அனிரூத் இசையமைக்கவும் உள்ளார்.இதனை சன்பிக்சர்ஸ் உத்தியோகபூர்வமாக அறிவித்திருந்தது.
இந்த படத்தில் சிவராஜ்குமார், ஐஸ்வர்யா ராய், பிரியங்கா அருள் மோகன், சிவகார்த்திகேயன், ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்ட பலர் நடிப்பதாக சொல்லப்படுகிறது.ஆனால் படத்தில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் என்பது பற்றி படக்குழு இதுவரை அதிகாரப்பூர்வமாக எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை.
இந்நிலையில் படத்திற்கு ஜெயிலர் என டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாக சமீபத்தில் படக்குழு அறிவித்தது. இதனால் விரைவில் படத்தின் ஷுட்டிங் துவங்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் பட அறிவிப்பு, டைட்டில் அறிவிப்பு என வெளியாகி பல நாட்கள் ஆன பிறகும் இதுவரை ஷுட்டிங் எப்போது என எந்த தகவலும் இல்லை.
இந்நிலையில் லேட்டஸ்ட் தகவலாக, ஜெயிலர் படத்திற்காக ஐதராபாத்தில் செட் அமைக்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறதாம். படத்தின் ஷுட்டிங் ஆகஸ்ட் மாதம் ஆரம்பிக்கப்பட உள்ளதாம். ஜெயிலர் படத்தின் பெரும்பாலான பகுதிகள் தான் ஐதராபாத் ஃபிலிம் சிட்டியில் தான் படமாக்கப்பட உள்ளதாம் என்று கூறப்படுகின்றது.
ஆகஸ்ட் மாதம் இரண்டாவது வாரத்தில் ஜெயிலர் படத்தின் ஷுட்டிங்கை துவங்க திட்டமிட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.அதே சமயம் டைரக்டர் நெல்சன் திலிப்குமார், படத்தின் கதையை ஃபைனல் செய்வதற்காக அடிக்கடி ரஜினியுடன் கதை டிஸ்கஷனில் ஈடுபட்டு வருவதாக சொல்லப்படுகிறது.
இருந்தாலும் கதையில் நெல்சனுக்கு முழு சுதந்திரம் கொடுத்து விட்டாராம் ரஜினி. அவரது ஸ்டைலில் கதையை உருவாக்கும் படியும் ரஜினி, நெல்சனிடம் சொல்லி விட்டாராம். படத்தில் நடிக்க யாரை தேர்வு செய்திருக்கிறார் என்பது பற்றியும் நெல்சனிடம் ரஜினி கேட்டு வருகிறாராம் என்பதும் குறிப்பிடத்தக்கது.
பிற செய்திகள்
- எங்களுக்கு ரிஸ்க் எடுக்கிறது எல்லாம் ரஸ்க்கு சாப்பிடுற மாதிரி- அஜித்தை மிஞ்சிய அமீர்கான்
- நயன்தாராவின் 75 படத்தில் இப்படி ஒரு டுவிஸ்ட் இருக்கா?-மாஸ்டர் பிளான் தான் போட்டிருக்கிறாங்க
- விஜய்தேவர்கொண்டாவுடன் டேட்டிங் செய்ய எனக்கு ஓகே-காதல் வலையில் சிக்கிய பிரபல நடிகை
சமூக ஊடகங்களில்:
- Facebook : சினிசமூகம் முகநூல்
- Twitter: சினிசமூகம் ட்விட்டர்
- Instagram : சினிசமூகம் இன்ஸ்டாகிராம்
- YouTube : சினிசமூகம் யு டியூப்
Listen News!