தமிழ் சினிமாவில் முக்கிய இயக்குநராக வலம் வருபவர் தான் வெங்கட் பிரபு. இவர் மன்மதலீலை படத்தைத் தொடர்ந்து தெலுங்கு நடிகர் நாகசைதன்யாவை வைத்து புதிய திரைப்படம் ஒன்றை இயக்க உள்ளார் .
தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகும் இந்த திரைப்படம் தொடர்பான அறிவிப்பு கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளியாகி இருந்தது.
நாகசைதன்யாவின் நடிப்பில் 22 ஆவது படமாக இது உருவாக உள்ள நிலையில், தயாரிப்பாளர் ஶ்ரீனிவாச சித்துரி, Srinivasaa Silver Screens சார்பில் தயாரிக்கிறார். இந்நிலையில், வெங்கட் பிரபு - நாகசைதன்யா இணையும் படம் தொடர்பாக தற்போது அதிரடியான அப்டேட் ஒன்று வெளி வந்துள்ளது.
"NC22" என இந்த படத்திற்கு தற்போது பெயரிடப்பட்டுள்ள நிலையில், இதன் படப்பிடிப்பு நாளை (21.09.2022) ஆரம்பமாகும் என அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது. ஹைதராபாத்தில் உள்ள ராமோஜி பிலிம் சிட்டியில் படப்பிடிப்பு ஆரம்பமாகும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக இந்த படத்தின் பூஜையும் சமீபத்தில் நடைபெற்றிருந்தது. 'NC22' படத்தில் நாயகியாக நடிகை கீர்த்தி ஷெட்டி நடிக்க உள்ள நிலையில், இசைஞானி இளையராஜா மற்றும் இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா ஆகியோர் இணைந்து இசையமைக்க உள்ளனர்.
Listen News!