• Sep 20 2024

புதுப்பேட்டை திரைப்படத்தின் இரண்டாவது பாகத்தின் உருவாக்கம் குறித்து வெளியாகிய புதிய அப்டேட்

stella / 2 years ago

Advertisement

Listen News!

துள்ளுவதோ இளமை என்ற திரைப்படத்தில் எழுத்தாளராக அறிமுகமானார் இயக்குநர் செல்வராகவன். தொடர்ந்து புதுப்பேட்டை என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அவதாரமெடுத்தார். இத்திரைப்படம் கடந்த 2006 இல் நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியாகி ஹிட்டானது.

விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் மாபெரும் கொடுத்தது . இன்றளவும் இத்திரைப்படம் பேசப்பட்டு வருகின்றது.அப்பாவி இளைஞன் ஒருவன் சூழ்நிலைகளின் தாக்கத்தால் எப்படி தாதாவாக மாறுகின்றான், என்பது படத்தின் மையக்கரு.

படத்தில் மாணவன் அப்பாவி இளைஞன் இரக்கமற்ற என பல ரோல்களில் நடித்திருப்பார் தனுஷ். தனுஷின் சினிமா பயணத்தில் புதுப்பட்டு மிகப் பெரும் திருப்பத்தை கொடுத்தது.

இதனால் இப்படத்தின் அடுத்த பாகம் எப்போது வரும் என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் இருந்தனர். கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக புதுப்பேட்டை பாகம் 2 எப்போது வரும் என்ற கேள்வியை இயக்குநர் செல்வராகவன் எதிர்கொண்டு வந்தார்.

இந்நிலையில் சென்னையில் நடந்த புத்தக வெளியீட்டு விழாவில் பங்கேற்ற இயக்குநர் செல்வராகவனிடம் புதுப்பேட்டை 2 எப்போது வரும் என்ற கேள்வி கேட்டபோது புதுப்பேட்டை உருவாகவுள்ளது .விரைவில் வரும் என்று கூறியுள்ளார்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement