தமிழ் சினிமாவில் முக்கியமானவராக வலம் வருபவர் தான் நடிகர் விஜய். வசூல் மன்னனாக திகழ்ந்து வரும் இவர் கோடிக்கணக்கான ரசிகர்களையும் வைத்துள்ளார். இவரது படம் ரிலீஸாகும் போதெல்லாம் ரசிகர்கள் கொண்டாடித் தீர்த்து வருவதும் முக்கியமாகும்.
அந்த வகையில் இவர் தற்பொழுது தெலுங்கு இயக்குநர் வம்சி இயக்கத்தில் வாரிசு என்னும் படத்தில் நடித்து வருகின்றார். இப்படத்தின் படப்பிடிப்பானது ஹைதராபாத்தில் படு வேகமாக நடைபெற்று வருகின்றது. இது குறித்த புகைப்படங்களும் அடிக்கடி வெளியாகிக் கொண்டிருக்கின்றது.
இதனால் படக்குழு கடுமையான சட்ட திட்டங்களுடன் படப்பிடிப்பை நடத்தி வருகின்றது.இப்படத்தின் அடுத்த கட்டப் படப்பிடிப்பானது சென்னையில் அக்டோபர் மாதம் நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளனராம்.
சென்னையில் நடக்கும் படப்பிடிப்பு தான் இறுதிக்கட்ட படப்பிடிப்பாக இருக்குமாம்.இதுவரை படத்தின் ஃபஸ்ட் லுக் போஸ்டர்கள் மட்டுமே வெளியாகி இருந்தது. தற்போது அடுத்த அப்டேட் குறித்து தகவல் வந்துள்ளது. அதாவது படத்தின் ஃபஸ்ட் சிங்கிள் வரும் தீபாவளி ஸ்பெஷலாக வெளியாகும் என்கின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Listen News!