• Sep 20 2024

திடீரென காணாமல் போன நிலா- பாக்கியா எடுத்த முக்கிய முடிவு- அதிர்ச்சியில் ராமமூர்த்தி- Baakiyalakshmi Serial

stella / 11 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் பாக்கியலட்சுமி. அந்த வகையில் இந்த சீரியலில் இன்றைய தினம் என்ன நடக்கவுள்ளது என்று பார்ப்போம்.

இனியா வெளி வாசலில் வைத்து நிலாவுக்கு சாப்பாடு ஊட்டிட்டு இருக்கின்றார். பின்னர் நிலா தண்ணீர் கேட்டதால் உள்ளே சென்று தண்ணீர் எடுத்துக் கொண்டு வந்து நிலாவைப் பார்க்கும் போது நிலாவைக் காணாததால் பதறிப்போய் பாக்கியாவிடம் சொல்கின்றார். பின்னர் எல்லோரும் தேடுகின்றனர்.


அப்போது ஈஸ்வர் என்பவர் வருகின்றார் ( நடிகர் சித்தார்த்). அவர் நிலாவை நான்கு வீடு தள்ளிப் பார்த்தாக சொல்ல பாக்கியா அவரை உள்ளே அழைத்து டீ குடிக்கக் கொடுக்கின்றார். அவரும் டீயைக் குடித்துக் கொண்டு குழந்தைகளை கவனமாகப் பார்த்துக்கணும். தன்னுடைய அண்ணன் பொண்ணு பற்றியும் சொல்வதோடு எல்லோரும் சித்தாவை பார்க்க வரணும் என்று சொல்லி விட்டுச் செல்கின்றார்.

தொடர்ந்து இனியா காலேஜிற்கும் செழியன் ஆபிஸுற்கும் கிளம்புகின்றனர். அவர்களை அனுப்பி விட்டு ஈஸ்வரியிடம் பேசும் பாக்கியா தான் காலேஜை விடப் போவதாகச் சொல்கின்றார். அத்தோடு இவ்வளவு நாளாக தான் சின்னப்பிள்ளை போல நடந்து கொண்டதாகவும் இனிமேல் தான் சரியாக நடப்பேன் என்றும் காலேஜை விடப் போவதாகவும் சொல்கின்றார்.


இதனால் ராமமூர்த்தி அதிர்ச்சியடைகின்றார். இருந்தாலும் பாக்கியா முடிவை மாற்றிக் கொள்வதாக இல்லை. தொடர்ந்து ஹொட்டலில் இனியா பாக்கியா செழியன் எல்லோரும் சாப்பிட உட்கார்ந்து இருக்கும் போது செழியன் பாக்கியாவை மீண்டும் காலேஜிற்குப் போகச் சொல்கின்றார். ஆனால் பாக்கியா மறுத்து விடுகின்றார். அப்போது பழனிச்சாமியும் வந்து சேர்ந்திருந்து சாப்பிட்டு பாக்கியாவை சிரிக்க வைக்க முயற்சி செய்கின்றார். இத்துடன் இன்றைய எப்பிஷோட் முடிவடைகின்றது.


தொடர்ந்து வெளியாகிய ப்ரோமோவில் ஜெனிக்கு வயிறுவலி வந்ததால் எல்லோரும் ஹாஸ்பிட்டலுக்கு கொண்டு போகின்றனர். ஜெனி வலியால் துடிப்பதைப் பார்த்து செழியனும் அழுகின்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement