• Sep 21 2024

பிரசாந்த் பட ஷூட்டிங்கில் இருந்து நைசா ஓட்டம் பிடித்த நடிகை-யார் தெரியுமா..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் 90களில் வாரிசு நடிகராக அறிமுகமாகி தமக்கென்று ஓர் இடத்தைப் பிடித்த நடிகர் தான் நடிகர் பிரசாந்த். இவர் நடித்த பல திரைப்படங்கள் ரசிகர்களிடையே அதிக வரவேற்பைப் பெற்றிருக்கின்றது.

அதிலும் இவர் நடிப்பில் வெளியான ஜீன்ஸ், ஜோடி, வின்னர் போன்ற திரைப்படங்கள் ரசிகர்களைப் பெரிதும் கவர்ந்திருக்கின்றன. மேலும் சில காலம் உடல் எடை அதிகரித்ததால் சினிமாவை விட்டு விலகியிருந்ததோடு தற்பொழுது மீண்டும் ரீ என் ரீ கொடுத்து நடித்து வருகின்றார்.

அதாவது ஆயுஷ்மான் குரானா, தபு, ராதிகா ஆப்தே உள்ளிட்டோர் நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட்டான அந்தாதுன் படத்தை தன் மகன் பிரசாந்தை வைத்து தமிழில் அந்தகன் என்கிற பெயரில் ரீமேக் செய்திருக்கிறார் தியாகராஜன்.

தபு நடித்த கொடூரமான வில்லி கதாபாத்திரத்தில் சிம்ரன் நடித்துள்ளார். ராதிகா ஆப்தே கதாபாத்திரத்தில் ப்ரியா ஆனந்த் நடித்திருக்கிறார்.

இந்நிலையில் பேட்டி ஒன்றில் தியாகராஜன் சுவாரஸ்யமான தகவல் ஒன்றை தெரிவித்துள்ளார். அவர் தெரிவித்ததாவது..

நந்தகுமார் இயக்கத்தில் பிரசாந்த் நடித்த படம் ஜாம்பவான். மேலும் அந்த படத்தில் அவருக்கு ஜோடியாக நிலா நடித்தார். பாடல் ஒன்றுக்கு பிரசாந்த் மற்றும் நிலா தண்ணீர் தொட்டியில் குளிக்க வேண்டும். எனக்கு சரும பிரச்சனை இருக்கிறது. அதனால் சாதாரண நீரில் குளிக்க மாட்டேன், தண்ணீர் தொட்டியில் மினரல் வாட்டரை ஊற்றுங்கள் என்றார் நிலா.

மேலும் meera chopra படப்பிடிப்பு கிராமத்தில் நடந்தது, மேலும் தொட்டியை மினரல் வாட்டரால் நிரப்பும் அளவுக்கு பட்ஜெட் இல்லை. எனவே சாதாரண நீரிலேயே குளிக்குமாறு நடிக்குமாறு நிலாவிடம் கூறினார்கள். அவரோ யாருக்கும் சொல்லாமல் சுவர் ஏறிக் குதித்து தப்பியோடிவிட்டார்.

மும்பைக்கு சென்ற அவரை சந்தித்து சமாதானம் செய்து வெளிநாட்டில் அந்த பாடலை ஷூட் செய்தார்கள் என்றார்.

Advertisement

Advertisement