• Sep 21 2024

பிரமாண்டமாக நடந்த நிவின்,ராகினி நிச்சயதார்த்தம்- மண்டபத்தில் நடப்பதைப் பார்த்து கதறி அழும் காவேரி- பரபரப்பான ப்ரோமோ

stella / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் மகாநதி. தந்தையை இழந்து வாழும் நான்கு பெண் பிள்ளைகள் தமது வாழ்க்கையில் எதிர்கொள்ளும் பிரச்சினைகளையே இந்த சீரியல் எடுத்துக் காட்டுகின்றது.

இதில் காவேரியும் நிவினும் காதலிக்கும் விஷயம் தெரிந்ததால் நிவினுக்கும் அவரது மாமன் பொண்ணு ராகினிக்கும் திருமணம் செய்துவைக்க ஏற்பாடு செய்துவிட்டனர். இதனால் நிவின் ஊரை விட்டுப் போனாலே நிச்சயதார்த்தம் நடக்காது என்று நினைத்திருந்தார்.


இதனடிப்படையில் தற்பொழுது ஒரு ப்ரோமோ வெளியாகியுள்ளது. அதாவது நிவின் நிச்சயதார்த்தத்திற்கு நிற்காவிட்டால் காவேரி குடும்பத்தையே அழிச்சிருவேன் என்று பசுபதி சொன்னதால் நிவின் பயந்து போய் ராகினியுடன் நிச்சயதார்த்தம் செய்ய சம்மதிக்கின்றார்.

நிவின் ஊருக்கு போய்விட்டதாக நினைக்கும் காவேரியிடம் குமரன் நிவின் எங்களை ஏமாத்திட்டு ராகினியை நிச்சயம் பண்ணிட்டு இருக்கிறான் என்று சொல்லி ராகினியை அழைத்துச் செல்கின்றார். மணமேடையில் நிவினையும் ராகினியையும் பார்த்த காவேரி கதறி அழுகின்றார். இத்துடன் இந்தப் ப்ரோமோ முடிவடைவதைக் காணலாம்.


Advertisement

Advertisement