• Sep 21 2024

என்னை யாரும் கண்டு கொள்ளவில்லை அதனால் இனிமேல் அதை செய்யமாட்டேன்- நடிகை நஸ்ரியா எடுத்த முடிவு

stella / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் நேரம் என்னும் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகியவர் தான் நடிகை நஸ்ரியா. இப்படத்தினைத் தொடர்ந்து அட்லி இயக்கத்தில் வெளியான ராஜா ராணி படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து ரசிகர்களைக் கவர்ந்தார்.

இப்படத்தில் கிடைத்த வரவேற்பை அடுத்து நையாண்டி, வாயை மூடி பேசவும், திருமணம் எனும் நிக்காஹ் போன்ற படங்களில் நடித்து ரசிகர்களிடையே மிகவும் பிரபல்யமானார்.தொடர்ந்த படவாய்ப்புக்கள் குவியத் தொடங்கினாலும் திடீரென திருமண பந்தத்தில் இணைந்தார்.


அதன்படி மலையாள நடிகரான பகத் பாசிலை திருமணம் செய்து கொண்டு சினிமாவில் இருந்து சற்று விலகினார்.இதனை அடுத்து தற்பொழுது மீண்டும் அடடே சுந்தரம் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகியுள்ளார். 

இந்நிலையில் நடிகர் நஸ்ரியா தாய்லாந்து பயணத்தின் போது தாய் ஏர்வேஸ் விமானத்தில் தனக்கு நடந்த ஒரு மோசமான அனுபவத்தைப் பகிர்ந்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட சமூக வலைதளப் பதிவில், “தாய் ஏர்வேஸின் சேவை மிக மோசமாக இருந்தது. விமானத்தில் எனது பைகள் காணாமல் போனதால் உதவி கேட்டு பணியாளர்களை அழைக்கும் போது அவர்கள் யாரும் கண்டுகொள்ளவில்லை. இனிமேல் என் வாழ்க்கையில் அந்த விமானத்தில் பயணம் செய்யமாட்டேன்” என்று குறிப்பிட்டுள்ளார். 


Advertisement

Advertisement