தமிழ் சினிமாவில் 80களில் முன்னணி நடிகராகவும் இயக்குநராகவும் வலம் வந்தவர் தான் பாக்கியராஜ். இவர் தற்பொழுது குணச்சித்திர வேடங்களில் பல திரைப்படங்களில் நடித்து வருகின்றார். அத்தோடு பல நிகழ்ச்சிகளிலும் விருந்தினராக பங்கு பற்றி வருகின்றார்.
இவருடைய மகனான சாந்தனுவும் சினிமாவில் வளர்ந்து நடிகராகவும் இருக்கின்றார்.15 ஆண்டுகளுக்கு மேலாக இருந்தாலும் சாந்தனுவால் இன்னும் ஒரு பேர்சொல்லும் வெற்றியைப் பெற முடியவில்லை.
சமீபத்தில் வெளியான பாவக்கதைகள் ஆந்தாலஜியில் அவர் நடித்த ‘தங்கம்’ குறும்படம் நல்ல பெயரை அவருக்குப் பெற்றுத்தந்தது. இதனைத் தொடர்ந்து இப்போது ‘இராவணக்கோட்டம்’என்னும் படத்தில் நடித்து வருகின்றார். இப்படத்தின் படப்பிடிப்பானது சமீபத்தில் தான் நிறைவுற்றது.
இந்நிலையில் இன்று நடிகர் சாந்தனு தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்த டுவிட் ஒன்று இணையத்தில் கவனத்தைப் பெற்றது. அதில் “எனக்கு சொந்தமாக இன்ஸ்டாகிராம் பக்கம் ஹேக் செய்யப்பட்டுள்ளது. யாரும் அந்த பக்கத்தில் இருந்து வரும் செய்திகளுக்கு ரெஸ்பான்ஸ் செய்யவேண்டாம். மறு அறிவிப்பு வரும் வரை” எனக் கூறியுள்ளார்.
Listen News!