தொகுப்பாளினியாக தனது பயணத்தை தொடங்கிய மகாலட்சுமி தற்போது சின்னத்திரையில் கலக்கி வருகிறார்.இதையடுத்து கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் தயாரிப்பாளர் ரவீந்திரனை காதலித்து திருமணம் செய்து கொண்டார் மகாலட்சுமி.
இருவரது திருமண புகைப்படங்களும் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலானது. ரவீந்திரன் சமூக வலைதளங்களில் உருவ கேலி செய்யப்பட்டார். அவருக்கு ஆதரவாகவும் ரசிகர்கள் கமெண்ட் செய்தனர்.
திருமணத்துக்கு பிறகு தங்களின் சோஷியல் மீடியா பக்கங்களில் தொடர்ந்து புகைப்படங்களை பதிவிட்டு வருகின்றனர்.திருமணத்துக்குப் பிறகும் சீரியல்களில் பிஸியாக நடித்து வருகிறார் மகாலட்சுமி.
இந்த நிலையில் தை பூசத்தை முன்னிட்டு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கோயில் ஒன்றில் தனது மனைவி மகாலட்சுமியுடன் எடுக்கப்பட்ட புகைப்படங்களைப் பகிர்ந்த ரவீந்திரன், தை பூசம் - நாங்கள் நேசிக்கும் உறவுகளுக்கு மட்டும் இல்லை. எங்களை நேசிக்கும் உறவுகளுக்காகவும் வேண்டி கொண்டோம் என்று குறிப்பிட்டுள்ளார்.தன் கணவரின் பதிவுக்கு ஹார்ட் ஸ்மைலியை கமெண்ட் செய்துள்ளார் மகாலட்சுமி.
Listen News!