விஜய் டிவியில் ஹிட்டாக ஓடிக் கொண்டிக்கும் சீரியல் தான் பாண்டியன் ஸ்டோர்ஸ். இந்த சீரியலில் தற்பொழுது அண்ணன் தம்பிகளுக்கிடையில் விரிசல் ஏற்பட்டு விட்டது. இதனால் அடுத்து என்ன நடக்கப் போகின்றது என்ற ஆர்வத்தில் ரசிகர்கள் இருக்கின்றனர்.
குறிப்பாக ஜீவா அண்ணனுக்கு எதிராக பேசியதோடு மாமனார் வீட்டிலேயே தங்கி விட்டார்.முல்லை வளைகாப்புக்கும் வரமாட்டேன் என்று சொல்லி விட்டார். இதனால் எப்போது மீண்டும் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம் ஒன்று சேரும் என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் இருக்கின்றனர்.
இந்த நிலையில் முல்லையில் வளைகாப்பு நடைபெறவுள்ளதால் வளைகாப்புக்கு ஜீவாவும் செல்வாரா என்ற எதிர்பார்ப்பானது ரசிகர்களிடையே அதிகமாக உள்ளது.இப்படியான நிலையில் நேற்றைய தினம் புத்தாண்டை முன்னிட்டு ஜீவா தன்னுடைய மகளுடன் சேர்ந்து விருந்து உண்டிருக்கின்றார்.இது குறித்த வீடியோவை தனது சமூக வலைத்தளப்பக்கத்தில் பதிவிட்டுள்ளார்
Listen News!