தென்னிந்திய சினிமாவில் முக்கிய நடிகராக வலம் வருபவர் தான் கன்னட நடிகர் கிச்சா சுதீப், இவர் சமீபத்தில் கலந்து கொண்ட பேட்டி ஒன்றில் பேன் இந்தியா திரைப்படங்கள் குறித்து பேசினார். அப்போது அவர், இனி ஹிந்தி தேசிய மொழி இல்லை என்று பேசியிருந்தார்.
அதற்கு பதிலளிக்கும் விதமாக பாலிவுட் நடிகர் அஜய்தேவ்கன் “ஹிந்தி தேசிய மொழி இல்லை எனில் ஏன் உங்கள் படங்களை ஹிந்தியில் டப் செய்து வெளியிடுகிறீர்கள்.” என வாக்குவாதம் செய்யும் விதமாக கேட்டிருந்தார்.
இதற்கு கிச்சா சுதீப் ஒரு பக்கம் பதிலளிக்க, இணையத்தில் தென்னிந்திய ரசிகர்கள் அஜய் தேவ்கனைக் கடுமையாக விமர்சித்தும், அவரின் முட்டாள்தனமாக கருத்தைக் கேலி செய்தும் பதிவிட்டு வந்தனர்.
இந்நிலையில் தற்போது பிரதமர் மோடி”இந்திய மாநிலங்கள் அனைத்தின் மொழியும் நமது அடையாளம்தான். சமீபகாலமாக சிலர் மொழியை வைத்து பிரச்சனையக் கிளப்ப பார்க்கிறார்கள்” என்று கூறியிருந்தனர்.
இதையடுத்து பிரதமரின் இந்த கருத்தைப் பகிர்ந்துள்ள கிச்சா சுதீப் “நான் சொன்னதைதான் இப்போது பிரதமரும் பிரதிபலிக்கிறார்” என்று கூறியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
பிற செய்திகள்:
- சிம்புவின் பத்து தல திரைப்படத்திலிருந்து கிடைத்த புதிய அப்டேட்- செம குஷியான ரசிகர்கள்
- ஆஸ்கார் விருதினைப் பெற்ற பிரபல இசையமைப்பாளர் மரணம்- இரங்கல் தெரிவிக்கும் திரையுலகம்
- நெஞ்சுக்கு நீதி திரைப்படத்தின் முதல் நாள் வசூல் இத்தனை கோடியா?-அசந்து போன ரசிகர்கள்
- கடுமையான ஒர்க் அவுட் செய்யும் நடிகை ராஷ்மிகா மந்தனாவின் லேட்டஸ்ட் கிளிக்ஸ்
- கீர்த்தி சுரேஷ் பிளாஸ்டிக் சர்ஜரி செய்து கொண்டாரா?-கடும் குழப்பத்தில் ரசிகர்கள்
- தனுஷ் மன்னிப்பு கேட்காவிட்டால் 10 கோடி ரூபாய் நஷ்ட ஈடு தரவேண்டும்- மதுரை தம்பதியினரால் ஏற்பட்ட பரபரப்பு
சமூக ஊடகங்களில்:
- Facebook : சினிசமூகம் முகநூல்
- Twitter: சினிசமூகம் ட்விட்டர்
- Instagram : சினிசமூகம் இன்ஸ்டாகிராம்
- YouTube : சினிசமூகம் யு டியூப்
Listen News!