• Sep 21 2024

"நிர்வாணப் புகைப்படங்களை வெளியிட்டது மக்கள் ரசிப்பதற்காகவே"…சர்ச்சையில் சிக்கிய பிரபல நடிகை..!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

பாலிவுட் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை வித்யா பாலன். பாலிவுட் திரைப்படங்களில் மற்றும் விளம்பரப் படங்களில் தோன்றிய இவர் தனது திரைத்துறை பயணத்தை பல இசைக் காணொளிகள், சவர்க்கார விளம்பரங்கள் மற்றும் பல வணிக ரீதியிலானவற்றில் தொடங்கி, 'பாலோ தேகோ' என்னும் வங்காள திரைப்படத்தில் நடித்ததன் மூலம் திரைத்துறைக்குள் நுழைந்தார்.

பிறகு இவர் ஹிந்தி திரைப்படமான 'பரிநீத்தா' என்பதில் அறிமுகமாகி பிலிம்பேரின் சிறந்த அறிமுக நடிகைக்கான விருதினைப் பெற்றார். மேலும் தனது முதல் வணிக வெற்றியை ராஜ்குமார் ஹிரானியின் 'லகே ரஹோ முன்னாபாய்' படத்தின் மூலம் பெற்றார்.

இவ்வாறாக சினிமாவில் தனித்துவமாக நடிக்கும் திறன் கொண்ட நடிகையான வித்யா பாலன் நடிகர் ரன்வீர் சிங்கின் நிர்வாண போட்டோ ஷூட்டிற்கு அண்மையில் தெரிவித்த கருத்து சர்ச்சயை ஏற்படுத்தியுள்ளது

அதாவது இது குறித்து கருத்து வெளியிட்ட வித்யா பாலன் "இதில் எந்த பிரச்சனையும் இருப்பதாக தனக்கு தெரியவில்லை என்றும், ஒரு ஆண் இதுபோல் போட்டோ ஷூட் நடத்துவது இதுவே முதல் முறை. இதனை மக்கள் ரசிக்க வேண்டும்' எனத் தெரிவித்துள்ளார்.

மேலும் "அந்த போட்டோக்களால் யாராவது புண்பட்டால் அவர்கள் அந்த போட்டோக்களை பார்க்க கூடாது" எனக் கூறியுள்ளார். அது மட்டுமல்லாது "எஃப் ஐ ஆர் பதிவு செய்த நபர்களுக்கு வேற வேலை எதுவும் இல்லாததால் அவர்கள் தங்கள் நேரத்தை இப்படி வீணடிக்கிறார்கள்" என்று தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

ஒரு பெண்ணாக இருந்து இவர் கூறிய இக்கருத்து சமூக வலைத்தளங்களில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. அதுமட்டுமன்றி அவரின் இக்கருத்தினை பெருமளவில் விமர்சிப்பதோடு இதற்கு ரசிகர்கள் பெரும் எதிர்ப்புத் தெரிவித்தும் வருகின்றனர்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement