பிரபல மாடல்களில் ஒருவராக சிறந்து விளங்கியவரே நடிகை அபிராமி வெங்கடாச்சலம். அதுமட்டுமன்றி ஏராளமான விளம்பர படங்களிலும் சிறப்பாக நடித்திருக்கின்றார்.
அதனைத் தொடர்ந்து வெப் சீரிஸ்கள் வாயிலாக சினிமாவுக்குள் அறிமுகமான அபிராமி, பல்வேறு தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் பங்கு பற்றி இருக்கின்றார்.
அந்தவகையில் 'நோட்டா, நேர்கொண்ட பார்வை' உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தாலும் அப்படங்கள் எதுவும் அவரை மக்கள் மத்தியில் கொண்டு சென்று சேர்க்கவில்லை.
பிரபல சேனலான விஜய் டீவியில் ஒளிபரப்பான 'பிக்பாஸ்' சீசன் 3 நிகழ்ச்சி மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். அதே நேரத்தில் அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டபோது பல்வேறு சர்ச்சைகளிலும் சிக்கி வந்திருந்தார்.
அதாவது அந்த நிகழ்ச்சியில் அபிராமி முதலில் சக போட்டியாளரான கவினை காதலிப்பதாக கூறி இருந்தார். ஆனால் கவின் சாக்ஷியை காதலித்ததால் கவின் மீது கொண்ட காதலை மாற்றிப் பின்னர் முகென் ராவை காதலிக்க தொடங்கினார்.
மலேசியாவை சேர்ந்த பாடகரான முகென் தனக்கு ஊரில் காதலி இருப்பதாக கூறியும் அபிராமி அவரை விடாது ஒரு தலையாக வெறித்தனமாக காதலித்து வந்தார்.
மேலும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற போதே, சில ஆண்டுகளுக்கு முன்பு தான் ஒருவரை காதலித்ததாகவும் ஆனால் அந்த காதல் இறுதியாக தோல்வியில் முடிந்ததாகவும் கவலையுடன் கூறி இருந்தார் அபிராமி. அதனைத் தொடர்ந்து அபிராமி தன்னுடைய எக்ஸ் காதலருடன் இருக்கும் போட்டோக்களும் வெளியானது.
பின்னர் அந்த காதலர் வேறு யாருமில்லை பிக்பாஸ் சீசன் 5 போட்டியாளரான நிரூப்தான் என ரசிகர்களுக்கு தெரியவந்தது.இதனைத் தொடர்ந்து பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் பங்கேற்ற அபிராமி அங்கும் பாலாஜி முருகதாஸுடன் நெருக்கமாக இருப்பதாக தகவல் பரவி வருகிறது.
இவ்வாறாக தொடர் காதல் சர்ச்சைகளில் சிக்கி வந்த அபிராமி தற்போது அது தொடர்பான எந்த விதமான சலனமும் இன்றி மிகவும் சந்தோசமாக சமூக வலைத்தளங்களில் தன்னுடைய பொழுதினைக் கழித்து வருகின்றார்.
அந்தவகையில் இன்றைய தினம் ஓணம் பண்டிகை ஆனது சாதாரண மக்கள் முதல் திரைப்பிரபலங்கள் வரை பலராலும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகின்றது.
அந்தவகையில் அபிராமியும் ஓணம் பண்டிகை ஸ்பெஷலாக ஊஞ்சலில் உட்கார்ந்து ஆடி சின்னக் குழந்தைகள் போன்று க்யூட்டான ரியாக்ஷன் கொடுத்திருக்கின்றார்.
இதனைப் பார்த்த ரசிகர்கள் அந்த விடீயோவிற்கு தமது லைக்ஸ்களை அள்ளிக் குவித்தும் வருகின்றனர்.
Listen News!