• Sep 20 2024

'ஒரு நாள் ஒரு கட்டிங் போட்டா..நல்லா இருக்கும்'...ஓபனாக பேசிய நடிகை ஓவியா..!

Jo / 1 year ago

Advertisement

Listen News!

நடிகை ஓவியா விமல் நடிப்பில் கடந்த 2010ம் ஆண்டில் வெளிவந்த களவாணி திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார். தொடந்து பல படங்களிலும் நடித்துள்ளார்.

ஆனால் இவர் நடித்த படம் இவருக்கு அடுத்தடுத்த வாய்ப்பினைத் தேடித்தரவில்லை. படவாய்ப்பு இல்லாமல் இருந்த ஓவியாவிற்கு சில படங்களில் பாடல்களுக்கு நடனம் மட்டும் ஆடினார்.

பின்பு நீண்ட இடைவேளைக்கு பின்பு கடந்த 2017ம் ஆண்டு பிரபல ரிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

இவர் பிக்பாஸ் வீட்டிற்குள் இருக்கும் போது ஆரவ்வை காதலித்து பிரச்சினை ஏற்பட்ட நிலையில், பிக்பாஸ் வீட்டில் தற்கொலை வரை சென்றார். ஆனால் இவருக்கு ரசிகர்கள் பேராதரவு கொடுத்தனர்.


பின்னர் இதிலிருந்து வெளிய வந்து சினிமாவில் ஆர்வம் காட்டி நடிக்க தொடங்கினார்.தற்போது வரை ஓவியாவிற்கு தனி ரசிகர் கூட்டம் உண்டு.சமீபத்தில் சேனல் ஒன்றின் பெட்டி ஒன்றில் கலந்துகொண்டிருந்தார்.அதில் சில கேள்விகள் கேட்கப்பட்டிருந்தது.அதற்கு எல்லாம் அசராமல் பதிலளித்திருந்தார்.


அந்தவகையில் அவர் கூறியதாவது ''எனக்கு எதுக்கும் பயமே இல்ல..பயம்ன்னா எனக்கு என்னன்னே தெரியாது..நிஜமா சொல்லுறன் அது எனக்கு ஒரு பிரச்சினை என்றே சொல்லாம்.அது கொஞ்சம் என்றாலும் இருக்கோணும் தானே..எமோஷன்லாம் கம்மி தான்.


மேலும் டெய்லி குடிக்கோணும்  பிரீயா கொடுக்கிறாங்க..நல்ல விஷயம் தானே..ஒன்னுனா அது Perfect ஆ இருக்கும் என கூறியிருந்தார்.


அத்துடன் நான் வேலையை ஒரு டிரீம் ஆ பாக்கல..வேலையை வேலையா தான் பாக்குறன். பிக் பாஸ் வந்ததால ,மூவி பண்றதால அப்படி இல்ல.என் ஹாரக்டரேஇப்படி தான்'' என பல வித்தியாசமான,சுவாரிஸ்யமான தகவல்களை அந்த பேட்டியில் பகிர்ந்துகொண்டிருந்தார்.


Advertisement

Advertisement