விஜய் தற்போது இயக்குநர் வம்சி இயக்கத்தில், 'வாரிசு' திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த திரைப்படம் வரும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாக உள்ளது. இந்த நிலையில் நேற்றைய தினம் சென்னை பனையூரில் உள்ள தன்னுடைய அலுவலகத்தில், விஜய் மக்கள் இயக்கத்தின் உறுப்பினர்களையும் ரசிகர்களையும் சந்தித்தார்.
மேலும் தன்னை சந்திக்க வந்த ரசிகர்களுக்கு பிரியாணி விருந்து கொடுத்து அசத்திய விஜய், விஜய் மக்கள் இயக்கம் செயல்பாடுகள் குறித்து விவாதித்ததாக கூறப்படுகிறது.அத்தோடு ரசிகர்களை சந்திப்பதற்காக ,விஜய் கருப்பு நிற பேண்ட் மற்றும் கருப்பு நிற ஷர்ட் அணிந்து மிகவும் ஸ்டைலிஷான லுக்கில் விஜய் வந்தது, மற்றும் ரசிகர்களுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் சில சமூக வலைதளத்தில் வைரலானது.
இந்நிலையில் விஜய் கடந்த முறை செய்த அந்த தவறை இந்த முறை செய்யாமல் மிகவும் உஷாராக நடந்து கொண்டதாக நெட்டிசன்கள் தற்போது விஜய்யின் கார் புகைப்படத்தை பகிர்ந்து கமெண்ட் செய்து வருகின்றனர். கடந்த முறை விஜய், ரசிகர்களை சந்திக்க வந்தபோது அவருடைய காரில் தடை செய்யப்பட்ட கருப்பு நிற சன் ஸ்டிக்கர் ஒட்டி இருந்ததால்... மோட்டார் வாகன சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு அவருக்கு சுமார் 100 ரூபாய் வீதம் அபராதம் விதிக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.
எனவே இந்த முறை தன்னுடைய காரில் ஒட்டப்பட்டிருந்த சன் ஸ்டிக்கர் நிறத்தை விஜய் மாற்றிவிட்டதாக அந்த காரின் புகைப்படத்தை பதிவு செய்து நெட்டிசன்கள் கமெண்ட் செய்து வருகிறார்கள். மேலும் இந்த புகைப்படங்களும் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
Listen News!