தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர் என பெயர் எடுத்த ரகுவரன்,1982ம் ஆண்டு ஏழாம் மனிதன் என்ற படத்தில் கதாநாயகனாக அறிமுகமானார். முதல் படத்திலேயே கதாநாயகனாக அறிமுகமானாலும், குணசித்திர கதாபாத்திரம், வில்லன் என அனைத்திலும் அசத்தினார்.
தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி என அனைத்து மொழிகளில் சிறந்த நடிகர் என பெயர் எடுத்த ரகுவரன், கடந்த 2008 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 19ந் தேதிஉயிரிழந்தார்.
இவர் நடிகை ரோகிணியைக் காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிகளுக்கு ரிஷி என்ற மகன் இருக்கும் நிலையில், இருவரும் 2004ம் ஆண்டு இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு விவாகரத்து பெற்று பிரிந்தனர். அதன் பின் தனியாக வசித்து வந்த பின்னர் தான் உயிரிழந்தார்.
இந்த நிலையில் ரகுவரனின் அம்மா அண்மையில் ஓர் பேட்டியளித்திருந்தார். அதில் ரகுவரன் உதவி செய்யக்கூடியவர். கண் தெரியாதவர்களின் ஆப்பிரேஷன் செலவுக்கெல்லாம் இவர் உதவி செய்திருக்கின்றார். படங்களில் மட்டும் தான் வில்லன் நிஜத்தில் தங்கமான மகன்.ரோகினியை விட்டுப் பிரிந்த பிறகு நான் தான் சாப்பாடு எல்லாம் கொண்டு போய் கொடுத்து பார்த்திட்டு வந்தேன். என் பேரன் பிறந்ததில் இருந்து நன் தான் கூட இருந்து பார்த்திட்டு இருந்தேன் என்றும் தெரிவித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Listen News!