தமிழ் சினிமாவில் 90களில் தனது அழகினாலும் நடிப்பினாலும் தனக்கென ஓர் ரசிகர் பட்டாளத்தை சேர்த்த முன்னணி நடிகையாக வலம் வருபவர் தான் மீனா. இவர் இறுதியாக ரஜினி நடிப்பில் வெளியாகியிருந்த அண்ணாத்த திரைப்படத்தில் நடித்திருந்தார்.
இதனைத் தொடர்ந்து கதாப்பாத்திரங்களுக்கு முக்கியத்துவம் உள்ள திரைப்படங்களில் நடித்து வருகின்றார். இவர் வித்யாசாகர் என்ற தொழிலதிபரை திருணம் செய்திருந்தார். 10 வருடங்களுக்கு மேலாக சந்தோசமாக வாழ்ந்து வந்தார்கள்.
இந்த நிலையில் கடந்த ஜூன் 28ம் தேதி வித்யாசாகர் நுரையீரலில் ஏற்பட்ட கோளாறு காரணமாக மரணமடைந்தார். மேலும் அவரது மரணத்திற்கான காரணம் பற்றி பல வதந்திகளும் உலா வர தொடங்கிய நிலையில், மீனா அறிக்கை வெளியிட்டு, வதந்தி பரப்பாதீர்கள் என கேட்டுக்கொண்டார்.
இந்நிலையில் தற்போது கலா மாஸ்டர் அளித்திருக்கும் பேட்டியில் மீனா கணவர் மரணத்திற்கான காரணத்தை கூறி இருக்கிறார்."பாம்பேவில் இருக்கும் புறா எச்சம் இருந்தால், சுவாசித்தாலே தவறு என சொல்வார்கள். பெங்களூரில் அது நிறைய இருக்கிறது. இப்படி லட்சத்தில் ஒருவருக்கு தான் infection ஏற்படும். அது சாகருக்கு வந்துவிட்டது" என கலா மாஸ்டர் தெரிவித்து இருக்கிறார். இந்த பேட்டியே வைரலாகி வருவதைக் காணலாம்.
பிற செய்திகள்
- என்னைக் கேட்காமல் எப்படி அந்த பெயரை வைப்பார்கள்- குலுகுலு திரைப்படத்தின் மீது மான நஷ்ட வழக்கை பதிவு செய்த கூல் சுரேஷ்
- செம்பருத்தி சீரியலின் கிளைமாக்ஸ் சீனுக்காக பார்வதி கட்டிய புடவையின் விலை இத்தனை கோடியா?
- வாரிசு திரைப்படம் பமிலி ராஃமா என்று யார் சொன்னது – புதிய அப்டேட்டைக் கொடுத்த சரத்குமார்
- மச்சினன் தனுஷிற்கு தாய் ஸ்தானத்திலிருந்து வாழ்த்துக் கூறிய செல்வராகனின் மனைவி
சமூக ஊடகங்களில்:
- Facebook : சினிசமூகம் முகநூல்
- Twitter: சினிசமூகம் ட்விட்டர்
- Instagram : சினிசமூகம் இன்ஸ்டாகிராம்
- YouTube : சினிசமூகம் யு டியூப்
Listen News!