தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாகவும், முன்னணி நடிகராகவும் கலக்கி வருகின்றார் நடிகர் சூர்யா.இவர் இயக்குநர் வசந்த் இயக்கத்தில் வெளிவந்த நேருக்கு நேர் திரைப்படத்தில் அறிமுகமானார். இவருடைய முதல் படம் வணிக ரீதியில் வெற்றி பெற்றது. இதனை தொடர்ந்து பல பட வாய்ப்புகளை பெற்றார்.சில படங்கள் நல்ல வெற்றியை கொடுத்தது. சில கடுமையான விமர்சங்களை பெற்றது.
தொடர்ந்து இவர் நடித்த காப்பான், சூரரைப்போற்று, ஜெய்பீம் ,எதற்கு துணிந்தவன் ஆகிய திரைப்படங்கள் நல்ல வரவேற்பையும் வசூல் வேட்டையும் நடத்தி இருந்தது.
சமீபத்தில், கமல்ஹாசன் நடிப்பில் கடந்த ஜூன் 3 இல் வெளியான விக்ரம் திரைப்படத்தில் ரோலக்ஸ் என்ற கதாபாத்திரத்தில் மிரட்டி இருந்தார்.இக்கதாப்பாத்திரத்தில் அதிக வரவேற்பை பெற்றார்.
அந்தவகையில், அமெரிக்காவில் வழங்கப்படும் அகாடமி விருது எனப்படும் ஆஸ்கார் விருது உலகப்புகழ்பெற்ற ஒன்று. பல காலமாக இந்த விருதைப் பெற இந்திய சினிமா முயற்சி செய்து வருகிறது. கடந்த ஆண்டு சூர்யாவின் சூரரைப்போற்று ஆஸ்கார் விழாவுக்கு அனுப்பப்பட்டது. பரிந்துரைக்கும் முன்னால் இறுதி செய்யப்பட்ட 366 படங்களின் பட்டியலில் ஒரே ஒரு இந்தியப் படமாக சூரரைப்போற்று இருந்தது. பின்னர் அப்படம் நீக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து தற்போது நடிகர் சூர்யாவுக்கு ஆஸ்கர் அகாடமி அழைப்பு விடுத்துள்ளது. ஆஸ்கர் அகாடமி உறுப்பினர்களாக 397 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. 397 நடிகர் சூர்யா மற்றும் பாலிவூட் நடிகை கஜோலின் பெயரும் இடம்பெற்றுள்ளது. புகழ்பெற்ற மோஷன் பிக்சர்ஸ் ஆர்ட்ஸ் அண்ட் சயின்ஸ் அகாடமியில் சேர நடிகர் சூர்யாவுக்கும் பாலிவுட் நடிகை கஜோலுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
பிற செய்திகள்
- ‘அந்த’ இடத்தில் வளையம் போட வாக்கெடுப்பு நடத்திய பிக்பாஸ் அபிராமி…குமுறும் ரசிகர்கள்..!
- மீனாவின் கணவனின் மரணத்தில் அடுத்தடுத்து வெளியாகும் திடுக்கிடும் காரணங்கள்… கதறிய மகள்..!
- காலண்டரில் குறித்து வைத்து சூர்யா செய்யும் செயல் – ரகசியத்தை போட்டுடைத்த ஜோதிகா
- நிஜ வாழ்க்கையில் காரில் கடத்தப்பட்ட நமீதா… போலீசாரிடம் சிக்கிய நபர்; நடந்தது என்ன..?
- பாலியல் தொழில் செய்ய சொல்லி மிரட்டல்- துணை நடிகை விடுத்த பரபரப்பு புகார்…!
சமூக ஊடகங்களில்:
- Facebook : சினிசமூகம் முகநூல்
- Twitter: சினிசமூகம் ட்விட்டர்
- Instagram : சினிசமூகம் இன்ஸ்டாகிராம்
- YouTube : சினிசமூகம் யு டியூப்
Listen News!