• Sep 20 2024

பாரிஸில் கவர்ச்சியை தெறிக்கவிடும் நம்ம கோம்லி கேர்ள் ஐஸ்வர்யா ராஜேஷ்! வைரலாகும் புகைப்படங்கள்..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

இந்திய சினிமாவில் தமிழ், தெலுங்கு, மலையாளம் எனப் பல மொழிகளிலும் நடித்து மக்கள் மத்தியில் பிரபல்யமான ஒருவரே நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். இவர் சன் தொலைக்காட்சியில் ‘அசத்தப் போவது யாரு’ என்ற நிகழ்ச்சியில் தொகுப்பாளராக தனது பணியை முதன்முதலில் ஆரம்பித்திருந்தார். அதனைத் தொடர்ந்து கலைஞர் தொலைக்காட்சியிலும் ‘மானாட மயிலாட’ என்ற போட்டி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வெற்றி பெற்றிருக்கின்றார்.

இதனைத் தொடர்ந்து ‘நீதானா அவன்’, ‘அட்டகத்தி’, ‘வட சென்னை’ போன்ற படங்களில் நடித்துப் புகழ் பெற்றிருந்தார். இதனைத் தொடர்ந்து பல படங்களிலும் நடித்திருந்த இவர் பல விருதுகளையும் வென்றிருக்கின்றார். இவரது தந்தை தெலுங்கில் பிரபலமான நடிகர் என்பதனால் இவருக்கு நடிப்புத் திறமை அவரது உணர்ச்சியில் ஊறி இருந்திருக்கின்றது.

இதிலும் குறிப்பாக இவர் 2014 இல் ‘காக்கா முட்டை’ என்ற திரைப்படத்தில் நடித்தமைக்காக சிறந்த நடிகைக்கான தமிழக அரசு திரைப்பட விருதினை வென்றிருந்தமை யாராலும் மறக்க முடியாது.

குடும்பக் குத்து விளக்கு போன்று பாரம்பரியமான உடைகளை அணிந்து நடித்து வந்த ஐஸ்வர்யா ராஜேஷ் சமீபகாலமாகவே கவர்ச்சிகள் கொஞ்சம் தூக்கலாக காட்டக்கூடிய வகையில் உடைகளை அணிந்து வருகின்றார். நடிகைகளை பொறுத்த வரையில் பட வாய்ப்புக்கள் குறைந்து செல்லும் சந்தர்ப்பங்களில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிடுவது வழமை.

ஐஸ்வர்யா ராஜேஷும் இதற்கு ஒன்றும் சளைத்தவர் அல்ல. இவரும் படவாய்ப்புக்களை பெற்றுக்கொள்ளும் நோக்கில் கவர்ச்சிப் புகைப்படங்களை தற்போது அடிக்கடி வெளியிட்டு வருகின்றார்.

அந்த வகையில் இப்போதும் தனது கவர்ச்சி புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் தெறிக்கவிட்டுள்ளார். இந்நிலையில் ஐஸ்வர்யா ராஜேஷ் தற்போது வெளிநாடுகளுக்கு சுற்றுலா சென்று இருக்கிறார். அங்கு அவர் சற்று கிளாமரான உடைகளில் போட்டோஷூட் எடுத்து வெளியிட்டு வருகிறார்.

இன்று அவர் பாரிஸில் eiffel டவர் முன்பு எடுத்த புகைப்படங்களை வெளியிட்டு இருக்கிறார்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement