விஜய் டிவியில் ஆரம்பித்த நாளிலிருந்து விறுவிறுப்புக்கு கொஞ்சம் கூட பஞ்சம் இல்லாமல் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் ரியாலிட்ரி ஷோ தான் பிக்பாஸ் சீசன் 6. இந்த நிகழ்ச்சியில் முக்கிய போட்டியாளராக தனலக்ஷ்மி என்பவர் பங்குபற்றியுள்ளார். இவர் நிகழ்ச்சியின் ஆரம்பத்திலிருந்து பலருடன் மோதலில் ஈடுபட்டு வருகின்றார்.
இந்த நிலையில் இவர் குறித்த சில விடயங்களை இவரது நண்பர்கள் சிலர பகிர்ந்துள்ளனர். அதாவது தனலக்ஷ்மி பிக்பாஸ் வீட்டில் கதை சொல்லும் டாஸ்கின் எனக்கு அப்பா கிடையாது ரொம்ப கஷ்டம் என்று தெரிவித்திருந்தார். ஆனால் அது உண்மை கிடையாது அவங்க வீடு பெரிய வீடு. அவங்க அப்பா அவங்க கூட தான் இருக்கிறாங்க அவ அப்பா கூட சேர்ந்து எல்லாம் டிக்டாக் பண்ணியிருக்கிறா. அவங்க அம்மா துணிக்கடை வச்சிருக்கிறாங்க என்றார்கள்.
மேலும் தொடர்ந்து பேசிய அவர்கள் தனலக்ஷ்மி டிக்டாக் பண்ணும் போது அவங்களுக்கு சர்போட் பண்ணுங்க என்று மக்களிடம் கேட்டதே நாங்க தான் ஆனால் அவ கடைசில எங்க அக்கவுண்டையே தூக்கிட்டா. அவளோட சேர்ந்து அவங்க தம்பியும் எங்களை அவமானப்படுத்தியிருக்கிறார். இது தவிர அவ படம் ஒன்றும் நடிச்சிருக்கிறா ஆனால் அது இன்னும் ரிலீஸ் ஆகல என்றும் கூறினார்கள்.
தொடர்ந்து பேசிய அவர்கள் பிக்பாஸ் வீட்டுக்குள்ள அவ கண்டிப்பா பணம் கட்டித் தான் போய்யிருப்பா. அவளுக்கு சினிமால நிறைய பேரைத் தெரியும் அப்படித் தான் இந்த வாய்ப்பும் அமைஞ்சிருக்கும் பிக்பாஸ் வீட்டோடை அடுத்த ஜுலி இவள் தான். வெளில வந்து இந்த அன்டர்வியூ வீடியோவைப் பார்த்தா எங்களை பொலிஸ்ல பிடிச்சுக் கொடுப்பா. இல்லை என்றால் எங்களை மிரட்டுவாஅவ்வளவு தானே என மனம் குமிற பேட்டியளித்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Listen News!