கேரளாவை சேர்ந்தவர் மடோனா செபாஸ்டியன். இவருக்கு இசையில்தான் அதிக ஆர்வம் இருந்தது. எனவே, பாடகி ஆக வேண்டும் என ஆசைப்பட்டார். அதற்காக பயிற்சியும் எடுத்தார்.
கர்நாட்டிக் மற்றும் வெஸ்டர் இசையை கற்றுக்கொண்டார். சில டிவி நிகழ்ச்சிகளிலும் இவர் பங்கேற்றுள்ளார். சில ஆல்பம் பாடல்களிலும் இவர் பாடியுள்ளார்.
பிரேமம் திரைப்படம் மூலம் இவர் நடிக்க துவங்கினார். அதன்பின் விஜய் சேதுபதியுடன் காதலும் கடந்து போகும் படத்தில் நடித்திருந்தார். ஒருபக்கம் மலையாள படங்களிலும் நடிக்க துவங்கினார்.
கவன், பவர் பாண்டி, ஜுங்கா, கொம்பு வச்சம் சிங்கம்டா உள்ளிட்ட சில படங்களில் நடித்தார். சிறைய மலையாள படங்களிலும் நடித்தார்.இதனை அடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் சமீபத்தில் வெளியாகியிருந்த லியோ திரைப்படத்திலும் நடித்திருந்தார். இப்படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபல்யமாகியுள்ளார்.
லியோ படத்தில் மடோனா செபாஸ்டியன் சிறிய ரோலில் நடிக்காமல் இருக்கலாம் என்று சிலர் அவர் மீது விமர்சனம் வைத்தனர்.இந்நிலையில் இது தொடர்பாக பேசிய மடோனா, நான் இந்த படத்தில் பெரிய ஸ்டார் என்பதால் லியோ படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டேன்.நமக்கு ஒரு வேலை கொடுத்தால் அதை முடிந்த அளவுக்கு சிறப்பாக செய்த வேண்டும். கதாபாத்திரம் பெரியது, சிறியது என்று எல்லாம் பார்க்க கூடாது. 100 சதவீத நம்முடைய உழைப்பை தரவேண்டும் என்று மடோனா செபாஸ்டியன் கூறியுள்ளார்.
Listen News!